கிளிநொச்சி – பூநகரி பகுதியில் எரிபொருள் பாரவூர்தி ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
குறித்த விபத்து இன்று (26.06.2025) அதிகாலை ஏற்பட்டுள்ளது.
யாழ். காங்கேசன்துறையில் இருந்து 33,000 – லீற்றர் கொள்கலனில் டீசல் கொண்டு சென்ற பாரவூர்தியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்நிலையில், விபத்தின் போது கொள்கலனில் இருந்த எரிபொருள் கசிந்து விரயமாகியுள்ளது.
அத்துடன், சாரதியின் உதவியாளர் விபத்தில் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.