9 34
இலங்கைசெய்திகள்

கனேடிய உயர்ஸ்தானிகரை சந்தித்தார் சிறீதரன் எம்.பி!

Share

கனேடிய உயர்ஸ்தானிகரை சந்தித்தார் சிறீதரன் எம்.பி!

இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஸிற்கும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன் (S. Shritharan) மற்றும் சண்முகம் குகதாசன் (K. S. Kugathasan) ஆகியோருக்கும் இடையே சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.

இந்த சந்திப்பு தொடர்பில் தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், சமகால அரசியல் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் அண்மையில் கனடாவுக்கு தாம் மேற்கொண்ட விஜயம் தொடர்பிலும் இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகருடன் கலந்துரையாடியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

அதேநேரம், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுவினருக்கும், கனேடிய உயர்ஸ்தானிகருக்கும் இடையிலான சந்திப்பொன்றை ஏற்பாடு செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தமது எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
image 172a2f580a
செய்திகள்அரசியல்இலங்கை

ஜனாதிபதியின் அந்நியச் செலாவணி நிலைத்தன்மைக் கூற்றுக்கு ஆதாரமில்லை: புபுது ஜெயகொட குற்றச்சாட்டு!

இலங்கையின் இறக்குமதிகள் அதன் ஏற்றுமதி வருவாயை விட அதிகமாக வளர்ந்துள்ளதால், நாட்டின் செலுத்துமதி சமநிலை பற்றாக்குறை...

25 690d6d53c26d1
செய்திகள்அரசியல்இலங்கை

விலங்கு நலனுக்கு நிதி ஒதுக்கி, மருத்துவர்களைத் தக்கவைக்கத் தவறிவிட்டது – வைத்தியர் சமல் சஞ்சீவ கடும் விமர்சனம்!

மருத்துவ மற்றும் சிவில் உரிமைகள் மருத்துவர்களின் தொழிற்சங்க கூட்டணியின் தலைவரான வைத்தியர் சமல் சஞ்சீவ, 2026ஆம்...

l78020250411143138 1296x700 1
செய்திகள்உலகம்

சீனா-அமெரிக்கா வர்த்தகப் பதற்றம் தணிப்பு: முக்கிய உலோகங்கள் மீதான ஏற்றுமதி தடை தற்காலிக நீக்கம் – கிராஃபைட் கட்டுப்பாடுகளும் நிறுத்தம்!

சீனா, அமெரிக்காவுக்கான முக்கிய உலோகங்கள் மீதான தனது ஏற்றுமதித் தடையை தற்காலிகமாக நீக்கியுள்ளது. இந்த நடவடிக்கை,...