9 34
இலங்கைசெய்திகள்

கனேடிய உயர்ஸ்தானிகரை சந்தித்தார் சிறீதரன் எம்.பி!

Share

கனேடிய உயர்ஸ்தானிகரை சந்தித்தார் சிறீதரன் எம்.பி!

இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஸிற்கும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன் (S. Shritharan) மற்றும் சண்முகம் குகதாசன் (K. S. Kugathasan) ஆகியோருக்கும் இடையே சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.

இந்த சந்திப்பு தொடர்பில் தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், சமகால அரசியல் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் அண்மையில் கனடாவுக்கு தாம் மேற்கொண்ட விஜயம் தொடர்பிலும் இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகருடன் கலந்துரையாடியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

அதேநேரம், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுவினருக்கும், கனேடிய உயர்ஸ்தானிகருக்கும் இடையிலான சந்திப்பொன்றை ஏற்பாடு செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தமது எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...