4 46
இலங்கைசெய்திகள்

கடும் அச்சுறுத்தல் : தனிப்பட்ட பாதுகாப்பு கோரும் வைத்தியர் அர்ச்சுனா

Share

கடும் அச்சுறுத்தல் : தனிப்பட்ட பாதுகாப்பு கோரும் வைத்தியர் அர்ச்சுனா

இலங்கையின்(sri lanka) 10வது நாடாளுமன்றத்தின் ஆரம்ப அமர்வின் போது தனது செயற்பாடுகள் காரணமாக தனக்கு ஏற்பட்ட அச்சுறுத்தல்களை அடுத்து புதிதாக தெரிவு செய்யப்பட்ட யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் அர்ச்சுனா இராமநாதன்(archuna) தனிப்பட்ட பாதுகாப்பை கோரியுள்ளார்.

கடந்த வாரம் இடம்பெற்ற 10 ஆவது நாடாளுமன்றத்தின் முதல் அமர்வின் போது, ​​நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா பாரம்பரியமாக எதிர்க்கட்சித் தலைவருக்கு ஒதுக்கப்பட்ட ஆசனத்தில் அமர்ந்து கொண்டு நகர மறுத்துவிட்டார், அதே நேரத்தில் அவர் இனவாத அறிக்கைகளை வெளியிட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில்,நாடாளுமன்ற வளாகத்தில் இன்று இடம்பெற்ற புதிதாக தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான வழிகாட்டல் நிகழ்வில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் இந்த சம்பவத்தினால் தாம் கடும் அச்சுறுத்தல்களை எதிர்நோக்கியுள்ளதாக சுட்டிக்காட்டினார்.

“நாடாளுமன்ற ஆசனத்தில் நடந்த சம்பவத்தால் என்னால் வீதியில் நடக்கக்கூட முடியவில்லை. ஊடகங்கள் 45-50 நிமிட பேட்டி எடுத்தன. நான் சாப்பிட்டுவிட்டேனா என்று அவர்கள் கேள்வி எழுப்பினர் அதற்கு நான் ஆம் என்று பதிலளித்தேன். அப்போது அவர்கள் நான் விடுதலைப் புலிகளின் அங்கமா என்று கேள்வி எழுப்பினர் அதற்கு நான் இல்லை என்று பதிலளித்தேன்.

ஆனால், இரண்டாவது கேள்விக்கு எனது பதிலைத் தவிர்த்துவிட்டனர், என்னால் தெருவில் நடக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது,” என்றார்

நிலைமையை சுட்டிக்காட்டிய நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன், நாடாளுமன்ற சிறப்புரிமைகளின் கீழ் தனக்கு வழங்கப்படும் தேவையான பாதுகாப்பை எவ்வாறு மற்றும் எப்போது ஏற்பாடு செய்ய முடியும் என நாடாளுமன்ற அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினார்.

நாடாளுமன்ற உறுப்பினருக்குப் பதிலளித்த நாடாளுமன்ற பிரதிச் செயலாளர் சமிந்த குலரத்ன, இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் பொது பாதுகாப்பு அமைச்சிடம் எழுத்துமூலக் கோரிக்கையை முன்வைக்க வேண்டும் என்றார்.

Share
தொடர்புடையது
Harini 1200x675px 26 03 25 1000x600 1
செய்திகள்இலங்கை

பல்கலைக்கழகப் பேராசிரியர் மீதான பாலியல் துன்புறுத்தல் புகார்: முறையான விசாரணை நடக்கிறது – பிரதமர் ஹரிணி அமரசூரிய!

வயம்பப் பல்கலைக்கழகத்தில் (Wayamba University) பேராசிரியர் ஒருவர் தனது விடுதியில் மாணவி ஒருவரை வலுக்கட்டாயமாகத் தடுத்து...

25 690903a432341
செய்திகள்இந்தியா

ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு: மங்கோலியாவில் அவசரமாகத் தரையிறங்கியது! 

சான் பிரான்சிஸ்கோவிலிருந்து டெல்லி நோக்கிப் பயணித்த ஏர் இந்தியா (Air India) விமானம் ஒன்று, தொழில்நுட்பக்...

25 69090d80f023d
செய்திகள்உலகம்

தென்சீனக் கடல் பதற்றம்: சீனாவுக்கு எதிராக கனடா, பிலிப்பைன்ஸ் இடையே முக்கியப் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்து!

தென்சீனக் கடலில் சீனாவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை எதிர்கொள்ளும் நோக்கில், கனடாவும் பிலிப்பைன்ஸும் ஒரு முக்கியமான பாதுகாப்பு...

25 6909005a2a5b7
செய்திகள்உலகம்

பிணைக்கைதிகள் உடல்கள் ஒப்படைப்பைத் தொடர்ந்து: 45 பலஸ்தீனர்களின் உடல்களை இஸ்ரேல் விடுவித்தது! 

ஹமாஸிடமிருந்து மூன்று இஸ்ரேலியப் பிணைக்கைதிகளின் உடல்கள் ஒப்படைக்கப்பட்டதைத் தொடர்ந்து, இஸ்ரேல் 45 பலஸ்தீனர்களின் உடல்களை ஒப்படைத்துள்ளதாக...