4 35 scaled
இலங்கை

எமது ஆட்சியில் வறியவர்களுக்கு 10000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படும்! அனுர

Share

எமது ஆட்சியில் வறியவர்களுக்கு 10000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படும்! அனுர

தமது ஆட்சியில் எரிபொருள் மற்றும் மின்சார கட்டணங்களை குறைப்பதுடன் வறியவர்களுக்கு மாதாந்தம் 10000 ரூபா வழங்கப்படும் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

கல்கமுவ பிரதேசத்தில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்தி வெற்றியீட்டினால் ஊழல் மோசடிகள், மக்களின் பணம் களவாடுதல் நிறுத்தப்படும் என அவர் உறுதியளித்துள்ளார்.

ஊழல் மோசடிகளை இல்லதொழித்து வறிய மக்களுக்கு நிவாரணங்களை வழங்கும் திட்டம் எம்மிடம் உள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கிராமிய பொருளாதாரம், சிறு கைத்தொழில்களை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் உண்டு என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மின்சார கட்டணம் 33 வீதத்தினால் குறைக்கப்படும் எனவும், குறைந்த வருமானம் ஈட்டுவோருக்கு மாதாந்தம் 10000 ரூபா வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விலைகள் குறைக்கப்படும் எனவும் உணவு மற்றும் கல்விக்கான பெறுமதி சேர் வரி நீக்கப்படும் எனவும் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

பிணையின்றி கடன் வழங்குவதற்கான அபிவிருத்தி வங்கியொன்று அறிமுகம் செய்யப்படும்.செலுத்தப்படாத வரி நிலுவைகள் மீள அறவீடு செய்யப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமது அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பினை ஏற்றதன் பின்னர் யாரிடமும் பழிவாங்கப் போவதில்லை என்பதுடன் களவாடப்பட்ட சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் என அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
articles2F0Nj1D1mrgD3fUv0MNcTa
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பல்கலைக்கழக சட்டத்தில் மாற்றம்: துறைத் தலைவர்களை நீக்கும் அதிகாரம் பேரவைக்கு! அதிபர் சேவை ஆட்சேர்ப்பிலும் விரிவான ஆய்வு.

பல்கலைக்கழகங்களின் நிர்வாகக் கட்டமைப்பு மற்றும் இலங்கை அதிபர் சேவையில் நிலவும் ஆட்சேர்ப்பு சிக்கல்கள் குறித்து, கல்வி...

1747723536 25 6828c2adaf2b1
செய்திகள்இலங்கை

ரயில்வே சேவையில் நெருக்கடி: கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 23 முதல் தொழிற்சங்க நடவடிக்கை!

நீண்டகாலமாகத் தீர்க்கப்படாமல் உள்ள நிர்வாகச் சிக்கல்களை முன்வைத்து, எதிர்வரும் ஜனவரி 23-ஆம் திகதிக்குப் பின்னர் நாடு...

1731919585 Ravi L
செய்திகள்அரசியல்இலங்கை

அரசாங்கம் தேர்தலைக் காலம் தாழ்த்த முடியாது: ஐ.தே.க – ஐ.ம.ச கூட்டணி குறித்து ரவி கருணாநாயக்க முக்கிய தகவல்!

மாகாணசபைத் தேர்தலை இந்த ஆண்டுக்குள் நடத்தத் தவறினால், அது அரசாங்கத்தின் எதிர்காலப் பயணத்திற்குச் சிறந்ததல்ல எனப்...

jaffna ini 900 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ். பல்கலைக்கழகத்தில் அதிர்ச்சி: அனுமதி பெறாமல் 2 மாதங்கள் மருத்துவக் கல்வி பயின்ற மாணவி!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில், பல்கலைக்கழக அனுமதி (Selection) பெறாத யுவதி ஒருவர் கடந்த இரண்டு...