இளைஞரின் உயிரை பறித்த மோட்டார் சைக்கிள்.

Motorcycle Accidnet

களுத்துறை மாவட்டம், மில்லேவ பகுதியில் நேற்றைய தினம் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் 29 வயதுடைய இளைஞர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

ஹொரணை – மீபே வீதியில், மில்லேவ பகுதியில் வைத்து மீபே நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று, சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி மின் கம்பத்தில் மொத்துண்டுள்ளது.

இந்த விபத்தில் பலத்த காயங்களுக்குள்ளான மோட்டார் சைக்கிள் ஓட்டுநரும், அவருடன் பயணித்தவரும் உடனடியாக பாதுக்க வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், மோட்டார் சைக்கிள் ஓட்டுநரான மில்லேவ பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

 

Exit mobile version