இலங்கைசெய்திகள்

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையான மைத்திரி!

Share

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையான மைத்திரி!

Maithri Appeared Bribery And Corruption Commission
வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (26) இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.

றோயல் பார்க் கொலைச் சம்பவத்தின் சந்தேகநபருக்கு பொதுமன்னிப்பு வழங்குவதற்காக பணம் பெற்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் நபர் ஒருவர் சமர்ப்பித்த மனு தொடர்பில் விசாரணை செய்வதற்காக அவர் இன்று (26) இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளார்.

2005 ஆம் ஆண்டு ராஜகிரிய ரோயல் பார்க் வீட்டுத் தொகுதியில் யுவதி ஒருவரை படுகொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் ஜூட் ஷமந்த ஜயமஹா என்ற சந்தேகநபருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.

அதனை தொடர்ந்து, மரணதண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிக்கு 2016 மே 17 ஆம் திகதியன்று மன்னிப்பு வழங்கப்பட்டதோடு, தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது.

அத்தோடு, ஒக்டோபர் 30, 2019 அன்று, அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையிலிருந்து விடுவித்து மன்னிப்பு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
13 4
செய்திகள்இந்தியா

கர்நாடகாவில் 16 வயதுக்குட்பட்டோருக்கு சமூக ஊடகத் தடை: முதலமைச்சர் சித்தராமையா அறிவிப்பு

கர்நாடகாவில் 16 வயதுக்குட்பட்ட சிறார்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்க அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது....

wo
செய்திகள்உலகம்

ஈரானின் நிலத்தடி ஏவுகணைத் தளங்கள்: போர்க்களத்தில் பலவீனமான புள்ளிகளாக மாறினவா?

ஈரான் தனது ஏவுகணைப் படைகளைப் பாதுகாப்பதற்காகப் பல ஆண்டுகளாக மலைகளுக்கு அடியில் அமைத்திருந்த பிரம்மாண்டமான ‘ஏவுகணை...

12 5
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் படகு கவிழ்ந்து விபத்து: இருவர் உயிரிழப்பு, தேடுதல் பணிகள் தீவிரம்!

யாழ்ப்பாணம், குருநகர் இறங்குதுறையில் இன்று (06.03.2026) காலை பயணிகளை ஏற்றிச் சென்ற படகு ஒன்று கவிழ்ந்து...

14 5
செய்திகள்உலகம்

இந்தோனேசியாவிலும் 16 வயதிற்குட்பட்டோருக்கு சமூக ஊடகத் தடை: மார்ச் 28 முதல் அமுல்!

இந்தோனேசியாவில் 16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு அந்நாட்டு அரசாங்கம் அதிரடித் தடை விதித்துள்ளது....