இலங்கைசெய்திகள்

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையான மைத்திரி!

Share

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையான மைத்திரி!

Maithri Appeared Bribery And Corruption Commission
வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (26) இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.

றோயல் பார்க் கொலைச் சம்பவத்தின் சந்தேகநபருக்கு பொதுமன்னிப்பு வழங்குவதற்காக பணம் பெற்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் நபர் ஒருவர் சமர்ப்பித்த மனு தொடர்பில் விசாரணை செய்வதற்காக அவர் இன்று (26) இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளார்.

2005 ஆம் ஆண்டு ராஜகிரிய ரோயல் பார்க் வீட்டுத் தொகுதியில் யுவதி ஒருவரை படுகொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் ஜூட் ஷமந்த ஜயமஹா என்ற சந்தேகநபருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.

அதனை தொடர்ந்து, மரணதண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிக்கு 2016 மே 17 ஆம் திகதியன்று மன்னிப்பு வழங்கப்பட்டதோடு, தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது.

அத்தோடு, ஒக்டோபர் 30, 2019 அன்று, அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையிலிருந்து விடுவித்து மன்னிப்பு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
40
உலகம்செய்திகள்

போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்ட இந்திய – பாகிஸ்தான்..! ட்ரம்ப் வெளியிட்ட தகவல்

இந்தியாவும் பாகிஸ்தானும் உடனடி போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக...

37
இலங்கைசெய்திகள்

இலங்கையில் கடவுச்சீட்டு பெற மீண்டும் நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்

பத்தரமுல்ல குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமை அலுவலகத்திற்கு அருகில் நேற்று முதல் நீண்ட வரிசைகள்...

38
இலங்கைசெய்திகள்

மொட்டு கட்சியில் மாற்றம்..! முக்கிய பதவிக்கு புதிய நியமனம்

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயற்பாட்டு பிரதானி பதவிக்கு முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ...

36
இலங்கைசெய்திகள்

கொட்டாஞ்சேனை மாணவி விவகாரம்: பிரதமர் தலைமையில் முக்கிய சந்திப்பு Prime Minister Meeting Kotahena Student Death

கொட்டாஞ்சேனையில் தவறான முடிவெடுத்து உயிரிழந்த மாணவி தொடர்பிலான விசாரணைகளை விரைவுபடுத்துமாறு பிரதமர் ஹரிணி அமரசூரிய, பொலிஸ்...