7 33 scaled
இலங்கை

இலங்கையில் சுற்றுலா பயணிகள் வந்து குவியும் இடம் : எது தெரியுமா !

Share

இலங்கையில் சுற்றுலா பயணிகள் வந்து குவியும் இடம் : எது தெரியுமா !

Best Beach Places To Visit Tourist In Sri Lanka

அம்பாறை (Ampara) மாவட்டத்தின் பொத்துவில் பிரதேச செயலகப் பிரிவின் கீழுள்ள அருகம்பே வளைகுடா கடற்கரையை ஒரு முக்கிய சுற்றுலாத் தலமாக மேம்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை அம்பாறை மாவட்ட சுற்றுலாத்துறையின் முக்கிய பங்குதாரர்களுடன் இடம்பெற்ற சந்திப்பின் போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickramasinghe) தெரிவித்துள்ளார்.

அறுகம்பே கடற்கரைப் பிரதேசம் பல்வேறு சிறப்பம்சங்களை தன்னகத்தே கொண்டுள்ளதால் இப்பிரதேசத்திற்கு தினமும் உள்ளுர் வெளிநாட்டு உல்லாச பிரயாணிகள் ஆயிரக்கணக்கானோர் தமது பொழுதினைப் போக்குவதற்காக வருகை தருகின்றனர்.

இங்கு வருகை தரும் உள்ளுர் வெளிநாட்டு பயணிகளின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்காகவும் கடலலை விளையாட்டில் ஈடுபடுபவர்களையும் பாதுகாப்பதற்கெனவும் அரச பாதுகாப்புப் படையினர் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அண்மையில் வெளிநாட்டு உல்லாசப் பிரயாணிகள் வருகையினைப் போல் உள்ளுர் சுற்றுலாப் பயணிகளும் இப்பகுதிக்கு விருப்புடன் வருகை தருகின்றனர்.

இந்த மாதத்தின் முதல் வாரத்தில் மாத்திரம் சுமார் 30 ஆயிரத்துக்கு அதிகமான வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை தந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பேராதனைப் பூங்கா, நுவரெலியா (Nuwara Eliya) மற்றும் பாசிக்குடா போன்ற இடங்களுக்கு பெருமளவில் சென்று பொழுதைக்கொண்டாடி உல்லாசமாக கழித்து வருகிறார்கள்.

இந்த வருடத்தில் இதுவரை பன்னிரண்டு லட்சத்து 50 ஆயிரம் சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு (Sri Lanka) வருகை தந்திருப்பதாக அறிவிக்கப்படுகிறது.

இதைவிட கணிசமான வருமானத்தை ஈட்டும் சாத்தியக்கூறுகளுடன் உள்ளூர் மற்றும் சர்வதேச சுற்றுலாப்பயணிகளுக்கு மிகவும் விரும்பத்தக்க இடமாக அறுகம்பே சுற்றுலா வலயத்தை மேம்படுத்துவதற்கான விரிவான திட்டத்தை விரைவாக நடைமுறைப்படுத்த ரணில் நடவடிக்கை எடுத்துள்ளார்.

குறித்த அருகம்பே வளைகுடா கடற்கரையோரத்தில் பிரபலமாக விளங்கும் நீர் பனிச்சறுக்கு போன்ற நீர் விளையாட்டுகளை ஊக்குவிப்பதன் மூலம் கணிசமான வருமானத்தை அடைவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தும் என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், 2035 ஆம் ஆண்டளவில் உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுற்றுலாத்துறை 10% பங்களிப்பை வழங்கும் என உலகளாவிய அறிக்கைகள் முன்னறிவிக்கப்பட்டுள்ளதுடன் அதற்கான மாற்றத்திற்கு இலங்கை முன்கூட்டியே தயாராகி வருவதைனை அருகம்பே வளைகுடா கடற்கரை வெளிநாட்டு உள்ளுர் பிரயாணிகளின் வருகை உறுதிப்படுத்துதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
images 9 3
அரசியல்இலங்கைசெய்திகள்

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் துப்பாக்கி வெடித்ததில் கான்ஸ்டபிள் காயம்!

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் இன்று (24) மாலை நிகழ்ந்த எதிர்பாராத துப்பாக்கிச் சூட்டு விபத்தில் பொலிஸ்...

images 9 3
செய்திகள்இலங்கை

நீர்நிலைகளில் இறங்கும்போது எச்சரிக்கை: பண்டிகைக் காலத்தில் பொதுமக்களுக்கு வைத்திய நிபுணர் விடுத்த அவசர வேண்டுகோள்!

தற்போது நிலவும் அனர்த்தச் சூழல் மற்றும் பண்டிகைக் காலத்தைக் கருத்திற் கொண்டு, நீர்நிலைகளைப் பயன்படுத்தும் போது...

25 693eb9bc28958
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சிவப்பு எச்சரிக்கை நீக்கப்பட்டாலும் ஆபத்து குறையவில்லை: மண்சரிவு பகுதிகளில் வசிப்போருக்கு NBRO கடும் எச்சரிக்கை!

மண்சரிவு அபாயத்தைக் குறிக்கும் ‘சிவப்பு எச்சரிக்கைகள்’ (Red Alerts) சில பகுதிகளில் நீக்கப்பட்ட போதிலும், அந்த...

1733556829 sridaran 2
செய்திகள்அரசியல்இலங்கை

சிறிதரன் பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும்: ஆதரவை மீளப்பெறுவதாக கஜேந்திரகுமார் எச்சரிக்கை!

கணக்காய்வாளர் நாயகம் பதவிக்கு இராணுவ அதிகாரி ஒருவரை நியமிப்பதற்கு ஆதரவாக வாக்களித்த சிவஞானம் சிறிதரனின் செயற்பாட்டிற்குத்...