images 17
இலங்கைசெய்திகள்

அடுத்த தேர்தலிலும் அடிவாங்கப்போகும் தமிழரசுக் கட்சி : பகிரங்கப்படுத்தும் அரசியல் ஆய்வாளர்

Share

அடுத்த தேர்தலிலும் அடிவாங்கப்போகும் தமிழரசுக் கட்சி : பகிரங்கப்படுத்தும் அரசியல் ஆய்வாளர்

நடைபெறவுள்ள உள்ளூராட்சிமன்றத் தேர்தலிலும் தமிழரசுக் கட்சி பாரிய தோல்வியை கட்டாயம் சந்திக்க நேரிடும் என பிரித்தானியாவின் (United Kingdom) அரசியல் ஆய்வாளர் தி.திபாகரன் (T. Thibakaran) சுட்டிக்காட்டியுள்ளார்.

குறித்த விடயத்தை லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “தமிழரசுக் கட்சிக்குள் எல்லோரையும் அணைத்து செல்கின்ற ஒருமைப்பாடுடைய தலைமைத்துவம் இல்லை.

தென்னிலங்கையில் சிங்களத்தவர்கள் தமது கட்சியை வளர்ந்து மிகச்சிறந்த அரசியல் எதிர்காலத்தை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கின்றனர் ஆனால் தமிழர் பிரதேசத்தில் பழைமையான மூத்த தமிழரசுக் கட்சி பாரிய பின்னடைவை சந்தித்துகொண்டு இருக்கின்றது.

அனைத்து வகையிலும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் தமிழரசுக் கட்சியை நம்பித்தான் வாக்களித்தனர் ஆனால் இந்த நிலை தொடருமானால் தமிழ் மக்கள் சிங்கள கட்சிகளை நோக்கி பயணிக்கும் நிலை வெகு விரைவில் ஏற்படும்” என அவர் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...