இலங்கைசெய்திகள்

அடுத்த தேர்தலிலும் அடிவாங்கப்போகும் தமிழரசுக் கட்சி : பகிரங்கப்படுத்தும் அரசியல் ஆய்வாளர்

images 17
Share

அடுத்த தேர்தலிலும் அடிவாங்கப்போகும் தமிழரசுக் கட்சி : பகிரங்கப்படுத்தும் அரசியல் ஆய்வாளர்

நடைபெறவுள்ள உள்ளூராட்சிமன்றத் தேர்தலிலும் தமிழரசுக் கட்சி பாரிய தோல்வியை கட்டாயம் சந்திக்க நேரிடும் என பிரித்தானியாவின் (United Kingdom) அரசியல் ஆய்வாளர் தி.திபாகரன் (T. Thibakaran) சுட்டிக்காட்டியுள்ளார்.

குறித்த விடயத்தை லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “தமிழரசுக் கட்சிக்குள் எல்லோரையும் அணைத்து செல்கின்ற ஒருமைப்பாடுடைய தலைமைத்துவம் இல்லை.

தென்னிலங்கையில் சிங்களத்தவர்கள் தமது கட்சியை வளர்ந்து மிகச்சிறந்த அரசியல் எதிர்காலத்தை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கின்றனர் ஆனால் தமிழர் பிரதேசத்தில் பழைமையான மூத்த தமிழரசுக் கட்சி பாரிய பின்னடைவை சந்தித்துகொண்டு இருக்கின்றது.

அனைத்து வகையிலும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் தமிழரசுக் கட்சியை நம்பித்தான் வாக்களித்தனர் ஆனால் இந்த நிலை தொடருமானால் தமிழ் மக்கள் சிங்கள கட்சிகளை நோக்கி பயணிக்கும் நிலை வெகு விரைவில் ஏற்படும்” என அவர் தெரிவித்துள்ளார்.

Share
Related Articles
8 10
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்றத்தில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட அர்ச்சுனா

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக நாடாளுமன்ற...

10 10
இலங்கைசெய்திகள்

ரணிலின் வெளிநாட்டு பயணங்களால் ஏற்பட்ட செலவு : அமைச்சர் வெளியிட்ட தகவல்

ஜனாதிபதியாக இருந்த காலத்தில் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 1.27 பில்லியன் ரூபா...

6 11
உலகம்செய்திகள்

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்கியதில் 13 இந்தியர்கள் பலி

காஷ்மீர்(Kasmir) மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் இராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் 13 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்....

9 10
இலங்கைசெய்திகள்

விமான சேவையை நிறுத்தும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

இந்தியா – பாகிஸ்தான் போர் தீவிரம் அடைந்துள்ள நிலையில், பாகிஸ்தானுக்கான விமான சேவைகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக...