இலங்கைசெய்திகள்

வேலையற்ற பட்டதாரிகளுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு

13 4
Share

அரசுத் துறையில் 35,000 வேலையற்ற பட்டதாரிகளை நியமிக்க திட்டமிட்டுள்ளதாக துணை அமைச்சர் எரங்க குணசேகர (Eranga Gunasekara )அறிவித்தார்.

இந்த மாத இறுதியில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ள 2025 வரவு செலவுத் திட்டத்தில் இந்த திட்டம் சேர்க்கப்படும் என்று அவர் கூறினார்.

இலங்கையில் வருடாந்தம் அரச பல்கலைக்கழகங்களிலிருந்து வெளியேறும் பட்டதாரிகள் அரச வேலைவாய்ப்பை நம்பியே இருக்கின்றனர்.இவர்களின் எதிர்பார்ப்பிற்கேற்ப அரசால் வேலை வாய்ப்பை வழங்க முடியாதுள்ளது என்பதே உண்மையாகும்.

அண்மையில் கூட யாழ்ப்பாணம் வருகை தந்த ஜனாதிபதி அநுர குமார திஸநாயக்கவிடம் வேலை வாய்ப்பை வழங்க கோரி பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே அரச துறையை மட்டும் நம்பியிருக்க வேண்டாம் என வேலையற்ற பட்டதாரிகளுக்கு தொழில் அமைச்சர் பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோ (Anil Jayantha Fernando)அண்மையில் வேண்டுகோள் ஒன்றை விடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Share
Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...