5 5
இலங்கைசெய்திகள்

வாகன பவனி இன்றி வந்த ஜனாதிபதி அநுர – வரலாற்றில் மாறுபட்ட சம்பவம்

Share

சுதந்திர சதுக்கத்திற்கு மூன்று காவல்துறை மோட்டார் சைக்கிள்களின் பாதுகாப்புடன் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) வந்த விடயம் சமூக வலைத்தளங்களில் பேசு பொருளாகி உள்ளது.

இலங்கையின் (Srilanka) 77வது தேசிய சுதந்திர தின பிரதான வைபவம் இன்று சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்றது.

இந்நிலையில், நிகழ்வில் கலந்து கொண்ட ஜனாதிபதி அநுர பாதுகாப்பு வாகனங்கள், ஆம்புலன்ஸ்கள் அல்லது பிற துணை வாகனங்கள் எதுவும் இல்லை வருகை தந்திருந்தார்.

அத்துடன் பிரதமர் மற்றும் விருந்தினர்களும் வந்தபோது, ​​ஒரே ஒரு காவல்துறையினரின் மோட்டார் சைக்கிள் மட்டுமே முன்னால் வந்ததை அவதானிக்க முடிந்தது.

எனினும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தனது பாதுகாப்பு தொடர்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவரது உயிருக்கு அச்சுறுத்தல் காணப்படுவதாகவும் அரசியல் ஆய்வாளர்கள் பலரும் எச்சரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, தேசியக் கொடி ஏற்றப்படும் போது, சிங்கள மொழி மூலம் தேசிய கீதம் இசைக்கப்பட்ட நிலையில், அணிவகுப்புக்கள் அனைத்தும் முடிவுற்ற பின்னர் தமிழ் மொழி மூலமும் தேசிய கீதம் இசைக்கப்பட்டது.

நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. பின்னர் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் காலத்தில் தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைக்கும் முறை நிறுத்தப்பட்டது.

தற்போது மீண்டும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்காவின் ஆட்சியில் தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைக்கும் முறை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

Share

Recent Posts

தொடர்புடையது
25 693ec68638296
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

வவுனியாவில் 7739.5 ஏக்கர் நெற்செய்கை அழிவு: விவசாயிகள் வாழ்வாதாரம் கேள்விக்குறி!

வவுனியா மாவட்டத்தில் அண்மையில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ள அனர்த்தம் காரணமாக, சுமார் 7739.5 ஏக்கர்...

13d5f9ce af20 4696 bf0a 60e56c536e64 1170x666 1
அரசியல்இலங்கைசெய்திகள்

லலித் – குகன் காணாமல் ஆக்கப்பட்ட விவகாரம்: கோட்டாபய யாழ்ப்பாணம் வராததற்கான அச்சுறுத்தலைச் சத்தியக் கடதாசியில் சமர்ப்பிக்க உத்தரவு!

யாழ்ப்பாணத்தில் 2011ஆம் ஆண்டு காணாமல் ஆக்கப்பட்ட லலித்குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகிய இருவர்...

MediaFile 1 5
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

மட்டக்களப்பில் 270 டெங்கு நோயாளர்கள்: தேசிய ஒழிப்பு வாரத்தில் சோதனை நடவடிக்கை!

மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இந்த ஆண்டில் சுமார் 270க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள்...

articles2FBKUgBmfeEql9AyVpMBVO
அரசியல்இலங்கைசெய்திகள்

நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப ஒன்றிணையுங்கள்: கடற்படை பயிற்சி நிறைவில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தல்!

திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியில் நேற்று (டிசம்பர் 13) பிற்பகல் நடைபெற்ற பயிற்சி நிறைவு...