க.பொ.த உயர்தர சிறந்த பெறுபேறுகள்: மேல் மாகாணத்தின் 361 மாணவர்களுக்கு ரூ. 36.1 மில்லியன் புலமைப்பரிசில்கள்!

24 66541af0bcb3f

ஜனாதிபதி நிதியத்தால் செயல்படுத்தப்படும் க.பொ.த உயர்தரப் பரீட்சைகளில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களைக் கௌரவிக்கும் நாடளாவிய வேலைத்திட்டத்தின் ஒன்பதாவது கட்ட நிகழ்வு இன்று (டிசம்பர் 14) அலரி மாளிகையில் நடைபெறவுள்ளது.

பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் நந்திக சனத் குமாநாயக்க ஆகியோரின் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெறுகிறது. 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் க.பொ.த உயர்தரப் பரீட்சைகளில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மேல் மாகாண மாணவர்கள் கௌரவிக்கப்படுவார்கள்.

கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களைச் சேர்ந்த 361 மாணவர்கள் இந்த நிகழ்வில் கௌரவிக்கப்படவுள்ளனர். ஜனாதிபதி நிதியத்தால் மொத்தமாக 36.1 மில்லியன் ரூபாய் பெறுமதியுள்ள புலமைப்பரிசில்கள் இந்த மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ளன.

Exit mobile version