image 62a50f36cc
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கேகாலையில் பாரிய சுற்றிவளைப்பு: 15 இலட்சம் பெறுமதியான வல்லப்பட்டை மற்றும் கடமான் கொம்புகள் மீட்பு!

Share

விமானப்படையின் புலனாய்வுப் பிரிவுக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், கேகாலை மற்றும் குருநாகல் பிரிவின் பாதுகாப்பு அதிகாரிகள் ஒன்றிணைந்து நடத்திய பாரிய சுற்றிவளைப்பில் வனவிலங்குப் பொருட்கள் மற்றும் சட்டவிரோத மரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

சுமார் 1050 கிலோ வல்லப்பட்டை (இதன் பெறுமதி 15 இலட்சம் ரூபாய்க்கும் அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது).5 கடமான் கொம்புகள், 3 மான் கொம்புகள், ஒரு தனி மான் கொம்பு மற்றும் பாதுகாக்கப்பட்ட அரிய வகை சிப்பிகள்.

கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட ஒரு லொறி கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கையில் இலங்கை விமானப்படையின் புலனாய்வுப் பிரிவு, ரிட்டிகல மற்றும் குருநாகல் வனவிலங்கு அலுவலக அதிகாரிகள் மற்றும் நாரம்பெத்த பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் (STF) இணைந்திருந்தனர்.

கைது செய்யப்பட்ட 6 சந்தேக நபர்களும் கேகாலை மற்றும் அலபலாவலவத்துர பகுதிகளைச் சேர்ந்தவர்கள். இவர்கள் தற்போது புலத்கோஹுபிட்டிய வனவிலங்கு அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

வனவிலங்கு சட்ட விதிகளின் கீழ் பிணையில் விடுவிக்கப்பட்ட இவர்களை, விரைவில் கேகாலை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

 

 

Share
தொடர்புடையது
30
செய்திகள்இந்தியா

உலகத் தலைவர்களில் முதலிடம் பிடித்து மோடி வரலாற்றுச் சாதனை!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில்  100 மில்லியன் (10 கோடி) பின்தொடர்பாளர்களை...

29
செய்திகள்விளையாட்டு

டி20 உலகக் கோப்பை: ஜிம்பாப்வே பந்துவீச்சை சிதறடித்த இந்திய பேட்ஸ்மேன்கள் – 20 ஓவர்களில் 256 ஓட்டங்கள் குவிப்பு!

2026 ஐசிசி டி20 உலகக் கோப்பையின் சூப்பர்-8 சுற்றில் இன்று நடைபெற்று வரும் முக்கியமான போட்டியில்,...

28
அரசியல்இலங்கைசெய்திகள்

“சுரேஷ் சலேயின் கைது ஒரு கண்துடைப்பு”: அரசாங்கம் மீது சரத் வீரசேகர கடும் தாக்குதல்!

ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேயின் கைது என்பது, உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களையும் கத்தோலிக்க...

27
செய்திகள்உலகம்

அமெரிக்கா – ஈரான் இடையே 3-ம் கட்ட பேச்சுவார்த்தை: அணு ஆயுதத் திட்டத்தை முடக்க டிரம்ப் அழுத்தம்!

அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையிலான அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான மூன்றாவது சுற்று மறைமுகப் பேச்சுவார்த்தைகள்...