IMG 20251217 WA0029 696x392 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

ஊழல் குற்றச்சாட்டு: கிளிநொச்சி மாசார் அ.த.க. பாடசாலை அதிபருக்கு எதிராகப் பெற்றோர் மற்றும் பழைய மாணவர்கள் போராட்டம்!

Share

கிளிநொச்சி, பச்சிலைப்பள்ளி மாசார் அ.த.க. பாடசாலையின் அதிபர் த.ஜெபதாஸ் மேற்கொண்டு வரும் நிதி முறைகேடுகள் மற்றும் தன்னிச்சையான செயற்பாடுகளுக்கு எதிராகப் பாடசாலை சமூகத்தினால் இன்று புதன்கிழமை (17) காலை அமைதி வழியிலான கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாடசாலை சமூகத்தினர் அதிபர் மீது பின்வரும் பாரதூரமான குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். பாடசாலைக் கணக்கறிக்கைகளில் முறைகேடு செய்தல் மற்றும் பொதுமக்கள் வழங்கும் நன்கொடை நிதியைப் பயன்படுத்துவதில் ஊழல் புரிதல்.

பாடசாலை சமூகத்தைப் புறக்கணித்துத் தன்னிச்சையாக முடிவுகளை எடுத்தல். தனிப்பட்ட பகமைகளைக் கருத்தில் கொண்டு மாணவர்களின் கல்வி மற்றும் நலன்களைப் புறக்கணித்தல்.

இவ்விவகாரம் தொடர்பாகப் பளை கோட்டக்கல்விப் பணிமனை, வலயம் மற்றும் மாகாணக் கல்வித் திணைக்களம் ஆகியவற்றிற்கு முறைப்பாடுகள் வழங்கியும், பச்சிலைப்பள்ளி பிரதேச அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் முறையிட்டும் இதுவரை எந்தத் தீர்வும் கிடைக்கவில்லை எனப் போராட்டக்காரர்கள் ஆதங்கம் வெளியிட்டுள்ளனர்.

மேலும், இந்த முறைகேடுகளில் ஆளுங்கட்சியின் சில உள்ளூர் பிரமுகர்களுக்கும் தொடர்பிருப்பதாகக் குற்றம் சாட்டியுள்ள அவர்கள், தேசிய மக்கள் சக்தியின் (NPP) நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதில் தலையிட்டு உடனடித் தீர்வைப் பெற்றுத்தர வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

இந்தக் கவனயீர்ப்புப் போராட்டத்தில் பெற்றோர்கள், பழைய மாணவர்கள் மற்றும் நலன் விரும்பிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர். இன்னும் ஒரு மாத காலத்திற்குள் முறையான தீர்வு வழங்கப்படாவிட்டால், பாடசாலையை முடக்கிப் பாரிய போராட்டத்தை முன்னெடுக்கப் போவதாகப் பாடசாலை சமூகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...