Death body 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உருகுலைந்த நிலையில் சிறுமியின் சடலம் மீட்பு!

Share

கடந்த 15 ஆம் திகதி காணாமல் போன சிறுமியின் உடல் உருகுலைந்த நிலையில் நேற்றைய தினம் பொலிஸாரால் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மூங்கிலாறு கிராமத்தில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த சிறுமி கடந்த 15 ஆம் திகதி தன்னுடைய சகோதரியின் வீட்டிற்கு சென்று வீடு திரும்பாததால் குறித்த சிறுமியை பொலிஸாரும் இராணுவத்தினரும் தீவிர தேடுதலை மேற்கொண்டுள்ளனர்.

அதற்கமைய நேற்றைய தினம் குறித்த சிறுமியின் சடலம் சகோதரியின் வீட்டிலிருந்து 50 மீற்றர் தொலைவில் கைவிடப்பட்ட காணியொன்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சிறுமியின் வலது கையை நாய் கடித்து துண்டித்துள்ளதாகவும், சிறுமியின் பிறப்புறுப்பில் ஏற்பட்ட பலத்த காயமே சிறுமியின் மரணத்துக்கு காரணம் என்றும் பிரேத பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.

சிறுமியின் சகோதரியின் கணவன் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
40 1
உலகம்செய்திகள்

உலகின் சிறந்த 10 வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் – ரஷ்யாவின் S-400 முதல் இஸ்ரேலின் Iron Dome வரை

இன்றைய நவீன போர் சூழலில், வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் ஒரு நாட்டின் பாதுகாப்புக்கான முதன்மை ஆயுதமாக...

39 1
உலகம்செய்திகள்

பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் ரூ.4,000 கோடியை செலவிட்ட இந்திய சுற்றுலாப் பயணிகள்

பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் இந்திய சுற்றுலாப் பயணிகள் ரூ.4,000 கோடியை செலவிட்டுள்ளனர். துருக்கியின் சுற்றுலாத்...

38 1
உலகம்செய்திகள்

இந்த காரணங்களால் இந்தியாவும் பாகிஸ்தானும் அணு ஆயுதப் போரில் ஈடுபடாது… விரிவான பின்னணி

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு இந்தியாவின் இராணுவ பதிலடி நடவடிக்கையான ஆபரேஷன் சிந்தூரை அடுத்த நாட்களில், இந்த...

26 7
இலங்கைசெய்திகள்

இறம்பொடையில் மற்றுமொரு விபத்து: 12 பேர் படுகாயம்

நுவரெலியா – கண்டி வீதியில் இறமம்பொட ஒத்த கடை அருகே வான் ஒன்று பாதையிலிருந்து கவிழ்ந்து...