நாட்டின் சில மாகாணங்களில் மழை பெய்யக்கூடும் என்றும், குறிப்பிட்ட சில கடற்கரைப் பகுதிகளில் காற்றின் வேகம் அதிகரித்து கடல் கொந்தளிப்பாகக் காணப்படும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
கிழக்கு மற்றும் மத்திய பகுதிகள்: மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், பொலன்னறுவை மாவட்டத்திலும் சிறிதளவில் மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தென் மாகாணம், களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் சில இடங்களில் மாலை 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்ய வாய்ப்புள்ளது. சப்ரகமுவ, மத்திய மாகாணங்களிலும், களுத்துறை, பதுளை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை நிலவும்.
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்று வடகிழக்கு திசையிலிருந்து மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வேகத்தில் வீசும்.
கொழும்பிலிருந்து புத்தளம் ஊடாக மன்னார் வரையான கடற்பரப்புகளிலும், மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளிலும் காற்றின் வேகம் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கலாம்.
காற்றின் வேகம் அதிகரிக்கும் மேற்கூறிய கடற்கரைப் பகுதிகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும். ஏனைய கடற்பரப்புகள் மிதமான அலையுடன் காணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.