632482948 1401422515360507 8840792616751761572 n
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி சுட்டுக்கொலை! – கரன்தெனிய சுத்த பின்னணியில் உள்ளாரா? பொலிஸார் சந்தேகம்!

Share

கொழும்பு – அக்குரேகொட பகுதியில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றிற்கு முன்னால் இன்று (13) மாலை 5.00 மணியளவில் அரங்கேறிய துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில், பிடிகல பகுதியைச் சேர்ந்த சட்டத்தரணி மல்வாரச்சி மற்றும் அவரது மனைவி ஆகிய இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஜீப் வண்டியில் இவர்கள் இருந்தபோது, சிற்றூந்து ஒன்றில் வந்த குழுவினர் டி-56 ரகத் துப்பாக்கியைப் பயன்படுத்தி சுமார் 10 தடவைகள் சரமாரியாகச் சுட்டுவிட்டுத் தப்பியோடியுள்ளனர்.

உயிரிழந்த சட்டத்தரணி மல்வாரச்சி, பிரபல பாதாள உலகக் குற்றவாளியான ‘கரன்தெனிய சுத்த’ என்பவரது நீதிமன்ற வழக்குகளில் முன்னிலையாகி வந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். தனது கட்சிக்காரரான கரன்தெனிய சுத்தவின் இரகசியத் தகவல்களை, அவரது எதிரிக் குழுவான ‘லொகு பெட்டி’ தலைமையிலான கும்பலுக்குக் கசியவிட்டதாக எழுந்த சந்தேகமே இந்த இரட்டைக் கொலைக்குக் காரணம் எனப் பாதுகாப்புப் பிரிவினர் ஆரம்பகட்ட விசாரணைகளில் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் குறித்துத் தலங்கம பொலிஸார் தலைமையிலான 3 விசேட பொலிஸ் குழுக்கள் உள்ளிட்ட பல குழுக்கள் விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளன. தப்பியோடிய காரைக் கண்டறிய சிசிடிவி (CCTV) காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. சட்டத்தரணி ஒருவர் இலக்கு வைக்கப்பட்ட இந்தச் சம்பவம், நாட்டின் சட்டத்துறையினர் மற்றும் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தத் துப்பாக்கிச் சூட்டுடன் சேர்த்து, 2026 ஆம் ஆண்டின் இதுவரையான சிறு காலப்பகுதிக்குள் இலங்கையில் 7 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இவற்றில் 7 பேர் உயிரிழந்துள்ளதுடன், நால்வர் காயமடைந்துள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது. பாதாள உலகக் குழுக்களைக் கட்டுப்படுத்த அரசாங்கம் முன்னெடுத்து வரும் விசேட நடவடிக்கைகளுக்கு மத்தியிலும் இத்தகைய சம்பவங்கள் தொடர்வது பாதுகாப்பு குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.

 

 

Share

Recent Posts

தொடர்புடையது
GGw2UsoWoAAu19A scaled 1
செய்திகள்அரசியல்இலங்கை

மொட்டு கட்சியில் இருந்து விலகினார் சோமரதன தேரர்! – திஸ்ஸகுட்டி ஆராச்சியின் போக்கிற்கு எதிர்ப்பு!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அநுராதபுர மாவட்டத் தலைவர் திஸ்ஸகுட்டி ஆராச்சியின் தன்னிச்சையான செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து,...

images 15
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலவச விசா வழங்குவதில் சட்டத் தடை! – தனியார் நிறுவன ‘விசா டீல்’ வழக்கால் முட்டுக்கட்டை என ருவான் ரணசிங்க தகவல்!

இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச விசா வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்துவதில் பாரிய சட்டச்...

1996569 stone quarry
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பண்டாரவளையில் அதிர்ச்சி: வெடிவைத்தபோது பாறைகள் சரிந்து விபத்து! – இடிபாடுகளுக்குள் சிக்கிய இருவரை மீட்கப் போராட்டம்!

பண்டாரவளை – மாபிட்டிய பகுதியில் அமைந்துள்ள கல் உடைக்கும் குவாரி ஒன்றில் இன்று காலை இடம்பெற்ற...

MediaFile 1 1
செய்திகள்உலகம்

குற்றங்களுக்கு வயது தடையில்லை! – ஆர்ஜென்டீனாவில் சிறார் குற்றவாளிகளுக்கான வயது 14 ஆகக் குறைப்பு; புதிய சட்டம் நிறைவேற்றம்!

ஆர்ஜென்டீனாவில் சிறார் குற்றவாளிகளாகக் கருதப்படும் குறைந்தபட்ச வயது வரம்பை 16-லிருந்து 14 ஆகக் குறைக்கும் வரலாற்றுச்...