வெலிகம பிரதேச சபைத் தலைவர் கொலை: சந்தேகநபர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் – பொதுப் பாதுகாப்பு அமைச்சர் தகவல்!

check afp sri lanka politician shot dead inside office 68f9b44b44c76 600

வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவின் படுகொலைக்குக் காரணமான சந்தேகநபர்கள் குறித்துத் தகவல் கிடைத்திருப்பதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்றையதினம் (அக்டோபர் 23, 2025) உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், சந்தேகநபர்கள் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள் கைது செய்யப்படுவார்கள் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகர, நேற்று முன்தினம் (அக்டோபர் 22) பிரதேச சபை அலுவலகத்தில் இருந்தபோது அடையாளம் தெரியாத ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது படுகொலை தொடர்பான விசாரணையை 4 பொலிஸ் குழுக்கள் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version