25 68fb1c1d6b80d
செய்திகள்இலங்கை

லசந்த விக்ரமசேகர மரணம்: தலையில் மற்றும் மார்பில் பலத்த காயம் – சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு உறுதி!

Share

வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவின் மரணத்திற்கான காரணம், துப்பாக்கிச் சூட்டினால் தலை மற்றும் மார்பின் உள் உறுப்புகளில் ஏற்பட்ட பலத்த காயங்களே ஆகும் எனப் பிரேத பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

மாத்தறை பொது மருத்துவமனையின் விசேட தடயவியல் மருத்துவ அதிகாரி நடத்திய பிரேத பரிசோதனையில் இந்த விடயம் தெரியவந்துள்ளது. லசந்த விக்ரமசேகரவின் உடலில் இருந்து மொத்தம் ஆறு தோட்டாக்கள் அகற்றப்பட்டுள்ளன.

துப்பாக்கிச் சூட்டினால் ஏற்பட்ட அபாயகரமான காயங்களின் தன்மையைக் கருத்தில் கொண்டு, லசந்த விக்ரமசேகர சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருக்க வேண்டும் என விசேட தடயவியல் மருத்துவ அதிகாரி தெரிவித்துள்ளார்.

வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகர, நேற்று முன்தினம் (அக்22) தனது உத்தியோகபூர்வ அலுவலக அறையில் இருந்தபோது அடையாளம் தெரியாத ஒருவரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.

குறித்த கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் தொடர்பில் உறுதியான தகவல்கள் கிடைத்துள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
202104130023062602 Bribery SECVPF
செய்திகள்இலங்கை

அரச பதவிகளுக்கு கையூட்டு கோரிய முன்னாள் பிரதியமைச்சர் பணியாளர் உட்பட இருவர் கைது!

அரச பதவிகளுக்கு கையூட்டல் கேட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கையூட்டல் ஒழிப்பு...

25 68e368cf08698
செய்திகள்இலங்கை

இலங்கையில் திருமணங்கள் குறைவு: 2024 இல் 12,066 திருமணப் பதிவுகள் சரிவு!

கடந்த ஆண்டில் (2024) நாட்டில் திருமணங்களின் எண்ணிக்கை பன்னிரண்டாயிரத்து அறுபத்தாறு (12,066) குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள்...

25 68fb438418a4b
செய்திகள்இலங்கை

“என் உயிருக்கு ஆபத்து”: தனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக எதிர்க்கட்சி உறுப்பினர் நாடாளுமன்றத்தில் பரபரப்பு குற்றச்சாட்டு!

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதான தனக்குக் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் தனது உயிருக்கு ஆபத்து...