25 68fb1c1d6b80d
செய்திகள்இலங்கை

லசந்த விக்ரமசேகர மரணம்: தலையில் மற்றும் மார்பில் பலத்த காயம் – சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு உறுதி!

Share

வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவின் மரணத்திற்கான காரணம், துப்பாக்கிச் சூட்டினால் தலை மற்றும் மார்பின் உள் உறுப்புகளில் ஏற்பட்ட பலத்த காயங்களே ஆகும் எனப் பிரேத பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

மாத்தறை பொது மருத்துவமனையின் விசேட தடயவியல் மருத்துவ அதிகாரி நடத்திய பிரேத பரிசோதனையில் இந்த விடயம் தெரியவந்துள்ளது. லசந்த விக்ரமசேகரவின் உடலில் இருந்து மொத்தம் ஆறு தோட்டாக்கள் அகற்றப்பட்டுள்ளன.

துப்பாக்கிச் சூட்டினால் ஏற்பட்ட அபாயகரமான காயங்களின் தன்மையைக் கருத்தில் கொண்டு, லசந்த விக்ரமசேகர சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருக்க வேண்டும் என விசேட தடயவியல் மருத்துவ அதிகாரி தெரிவித்துள்ளார்.

வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகர, நேற்று முன்தினம் (அக்22) தனது உத்தியோகபூர்வ அலுவலக அறையில் இருந்தபோது அடையாளம் தெரியாத ஒருவரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.

குறித்த கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் தொடர்பில் உறுதியான தகவல்கள் கிடைத்துள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
10 3
செய்திகள்உலகம்

ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதல்கள் நியாயமானவை: அமெரிக்க வெளியுறவு குழு தலைவர் பிரையன் மாஸ்ட் உறுதி!

அல்ஜெசீரா ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலில், மத்திய கிழக்கில் ஈரான் ஆதரவு குழுக்களை இலக்கு வைத்து அமெரிக்கா...

09 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மதுபோதையில் இருப்பவர்களால் பெண்களுக்கு அச்சுறுத்தல்: 71% பெண்கள் பொது இடங்களில் பாதுகாப்பற்ற உணர்வு!

மது அருந்தியவர்களினால் பொது இடங்களில் தமக்கு பாதுகாப்பு இல்லை என இலங்கையில் 71 வீதமான பெண்கள்...

08 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் எப்போது? பரீட்சை ஆணையாளர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30 ஆம்...

07 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

50,000 ரூபாய் லஞ்ச விவகாரம்: தெஹியத்தகண்டிய கல்விப் பணிப்பாளர் உள்ளிட்ட இருவர் பிணையில் விடுதலை!

பணியில் மீண்டும் இணைந்த ஒருவரின் நியமனக் காலத்தை நீடிப்பதற்காக 50,000 ரூபாயை லஞ்சமாகப் பெற்ற வழக்கில்,...