aJqHp SD
செய்திகள்உலகம்

இந்தோனேசியா மத்திய ஜாவாவில் பாரிய மண்சரிவு: கடும் மழைவீழ்ச்சியால் 11 பேர் உயிரிழப்பு, 12 பேரைக் காணவில்லை!

Share

இந்தோனேசியாவின் மத்திய ஜாவா மாகாணத்தில் பெய்த கடும் மழைவீழ்ச்சியால் ஏற்பட்ட பாரிய மண்சரிவில் சிக்கி 11 பேர் உயிரிழந்துள்ளதாக இந்தோனேசிய அனர்த்த முகாமைத்துவ நிறுவனம் (NDMA) தெரிவித்துள்ளது.

கடந்த வியாழக்கிழமை (நவ 13) சிலாகாப் நகரில் ஏற்பட்ட மண்சரிவில், சிபியூனிங் (Cibunian) கிராமத்தில் உள்ள பல வீடுகள் மண்ணுக்குள் புதைந்துள்ளன.

மண்சரிவில் சிக்கியவர்கள் 3 முதல் 8 மீட்டர் (10-25 அடி) ஆழத்தில் புதைந்திருந்ததால் மீட்புப் பணி மிகவும் சவாலானதாக மாறியுள்ளது.

நேற்று மூன்று பேரும் இன்று எட்டு பேருமாக மொத்தமாக 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

மீட்புப் பணியாளர்கள் காணாமல் போன மேலும் 12 பேரைத் தேடி வருவதாக NDMA இன் செய்தித் தொடர்பாளர் அப்துல் முஹாரி ராய்ட்டர்ஸிடம் தெரிவித்தார்.

தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேசியாவில் மழைக்காலம் செப்டம்பர் மாதம் ஆரம்பித்து ஏப்ரல் மாதம் வரை நீடிப்பதால், வெள்ளப்பெருக்கு மற்றும் அதிகளவான மழை பெய்யும் என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டின் ஆரம்பத்தில், ஜனவரி மாதத்தில் மத்திய ஜாவா நகரமான பெக்கலோங்கனில் (Pekalongan) பெய்த மழையால் ஏற்பட்ட மற்றொரு மண்சரிவில் சிக்கி சுமார் 25 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
09 A corruption
செய்திகள்இலங்கை

பிடியாணை, போதை வாகனம் உட்பட ஒரே நாளில் 5000க்கும் அதிகமானோர் கைது!

காவல்துறையினர் மேற்கொண்ட தொடர்ச்சியான நடவடிக்கைகளின் விளைவாக, பிடியாணை மற்றும் பல்வேறு போக்குவரத்து குற்றங்களுக்காக ஒரே நாளில்...

images 19
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அம்பாறையில் அதிர்ச்சிச் சம்பவம்:  மகளைத் தொடர்ச்சியாகப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தை கைது!

அம்பாறை மாவட்டம், பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவில் உள்ள புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில்...

1795415 01
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணம் – புன்னாலைக்கட்டுவனில் போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது!

யாழ்ப்பாணம் – புன்னாலைக்கட்டுவன் பகுதியில் போதை மாத்திரைகளுடன் சந்தேகநபர் ஒருவர் சுன்னாகம் பொலிஸாரால் நேற்று சனிக்கிழமை...

MediaFile 5 2
இலங்கைசெய்திகள்

அறுகம்பே பாலியல் அத்துமீறல் முயற்சி: சந்தேகநபரைப் பிடிக்கப் பொதுமக்களின் உதவி கோரல் – பொலிஸ் இலக்கங்கள் அறிவிப்பு!

கடந்த ஒக்டோபர் 25ஆம் திகதி அறுகம்பே பிரதேசத்தில் வெளிநாட்டுப் பெண் ஒருவரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட...