ஈரான் அதியுயர் தலைவர் காமேனியின் மனைவியும் உயிரிழப்பு: குடும்பத்தையே அழித்த அமெரிக்க-இஸ்ரேல் தாக்குதல்!

15 1

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் இணைந்து ஈரானின் அதியுயர் தலைவர் அயத்துல்லா அலி காமேனியை இலக்கு வைத்து நடத்திய தாக்குதலில், அவரது மனைவி மன்சூரே கோஜாஸ்தே பாகர்சாதே (79) உயிரிழந்துள்ளார். தாக்குதலின்போது பலத்த காயமடைந்து சுயநினைவிழந்த நிலையில் இருந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக ஈரானிய அரசு ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. இந்தத் தாக்குதல் காமேனியின் குடும்பத்தையே ஒட்டுமொத்தமாக அழித்துள்ளது.

இந்த அதிரடித் தாக்குதலில் அதியுயர் தலைவர் காமேனி, அவரது மனைவி, மகள், மருமகன் மற்றும் பேரப்பிள்ளை ஆகியோர் உயிரிழந்துள்ளனர். இதுமட்டுமன்றி, ஈரானிய ராணுவத்தின் சிரேஷ்ட நிலைத் தலைவர்கள் உட்பட 40க்கும் மேற்பட்ட உயர் அதிகாரிகள் கொல்லப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த இழப்பு ஈரானிய ஆட்சிக்கு மிகப்பெரிய பின்னடைவாகக் கருதப்படுகிறது.

தாக்குதல்கள் காரணமாக ஈரானின் பல ராணுவத் தளங்கள் மற்றும் அணுசக்தி ஆராய்ச்சி மையங்கள் முற்றிலும் சேதமடைந்துள்ளன. தெஹ்ரான் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பல குடியிருப்புப் பகுதிகளிலும் சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், பொதுமக்கள் அச்சமடைந்து பாதுகாப்பான இடங்களைத் தேடி வெளியேறி வருகின்றனர். பள்ளிகள் மற்றும் அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளன.

இந்தத் தாக்குதல்கள் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் அபாயத்தை உச்சக்கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளன. சர்வதேச நாடுகள் அமைதி காக்கவும், பதற்றத்தைத் தணிக்கவும் வலியுறுத்தியுள்ளன. ஐக்கிய நாடுகள் சபை அவசர ஆலோசனைக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் பொருளாதார பாதிப்புகள் குறித்து உலக நாடுகள் கவலையில் உள்ளன.

Exit mobile version