24
இந்தியாசெய்திகள்

“உங்கள் பசிக்கு இன்னும் எத்தனை உயிர்கள்?”: அது போலி கணக்கு – பிரபல நடிகை விளக்கம்

Share

எனது பெயரில் பதிவுகளைப் பரப்பும் ட்விட்டர் கணக்கு போலியானது என்று நடிகை கயாடு லோஹர் விளக்கம் அளித்துள்ளார்.

கரூர் துயர சம்பவம் குறித்து பிரபலங்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் வேதனை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் நடிகை கயாடு லோஹரின் எக்ஸ் தளத்தில் கணக்கில் வெளியான பதிவு எதிர்வினைகளைத் தூண்டியது.

ஏனெனில், அந்த பதிவில் ‘சுயநல அரசியலுக்காக கரூரில் தனது நண்பர்களில் ஒருவரை இழந்ததாகவும், விஜய் உங்கள் நட்சத்திர அந்தஸ்துக்கு மக்கள் துணையாக இல்லை; உங்கள் பசிக்கு இன்னும் எத்தனை உயிர்கள்?’ என்றும் கூறப்பட்டிருந்தது.

இந்த நிலையில் கயாடு தனது உண்மையான எக்ஸ்தள பக்கத்தில் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.

அவர், “எனது பெயரில் பதிவுகளைப் பரப்பும் ட்விட்டர் கணக்கு போலியானது. எனக்கும் அதற்கும் எந்த தொடர்பும் இல்லை. மேலும் அங்கு வெளியிடப்பட்ட அறிக்கைகள் என்னுடையவை அல்ல. கரூர் பேரணியில் நடந்த துயர சம்பவத்தால் நான் மிகவும் வருத்தமடைந்தேன், மேலும் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு எனது மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இருப்பினும், கரூரில் எனக்கு தனிப்பட்ட நண்பர்கள் யாரும் இல்லை என்பதையும், என் பெயரில் பரப்பப்படும் கதை தவறானது என்பதையும் நான் மிகத் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

இந்த தவறான தகவலை நம்பவோ அல்லது பரப்பவோ வேண்டாம். மீண்டும் ஒருமுறை, துக்கத்தில் இருக்கும் குடும்பங்களுடன் எனது பிரார்த்தனைகள்” என தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
4 1
அரசியல்இலங்கைசெய்திகள்

உங்களது ஆட்சிக்காலத்திலேயே காணிகளை விடுவியுங்கள்: ஜனாதிபதியிடம் நாகதீப விகாராதிபதி நேரில் வலியுறுத்தல்!

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் தனியார் காணிகளை மீண்டும் அவர்களிடமே ஒப்படைக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அநுர...

25 68ed5a882ec6d
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சித்திரவதை செய்த பொலிஸ் பரிசோதகருக்கு 7 ஆண்டுகள் சிறை: மொனராகலை மேல் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!

நபர் ஒருவரைத் தாக்கி காயப்படுத்தியமை மற்றும் கொடூரமாகச் சித்திரவதை செய்த குற்றத்திற்காகப் பொலிஸ் பரிசோதகர் ஒருவருக்கு...

645574 4228922 updates
உலகம்செய்திகள்

அண்டார்டிகா பனிக்கடியில் ஒளிந்திருக்கும் மர்ம உலகம்: அதிநவீன செயற்கைக்கோள் மூலம் புதிய வரைபடம் வெளியீடு!

அண்டார்டிகாவை மூடியுள்ள பல்லாயிரக்கணக்கான அடி ஆழமான பனிப்படலத்திற்குக் கீழே மறைந்திருக்கும் நிலப்பரப்பு குறித்து சர்வதேச விஞ்ஞானிகள்...

articles2FFE3TpF1W8KlSV5Uh5Ngm
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மீண்டும் தண்டவாளத்தில் ரயில்கள்: திருகோணமலை, மட்டக்களப்பு இரவு நேர சேவைகள் ஜனவரி 20 முதல் ஆரம்பம்!

திட்வா (Titwa) புயல் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த கொழும்பு கோட்டையிலிருந்து திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு வரையான இரவு...