29 1
இந்தியாசெய்திகள்

கச்சதீவு விவகாரம் : தமிழக ஆளுநர் முன்வைத்த குற்றச்சாட்டு

Share

கச்சதீவு விவகாரம் : தமிழக ஆளுநர் முன்வைத்த குற்றச்சாட்டு

கச்சதீவில் இந்திய கடற்றொழிலாளர்கள் உரிமை பறிக்கப்பட்டதற்கு அப்போதைய மத்திய, மாநில அரசுகளே காரணம் என்று தமிழக ஆளுநர் ஆர். என். ரவி தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “இன்று நான் ராமேஸ்வரம் சென்றிருந்தபோது துன்பத்தில் உழலும் கடற்றொழில் சமுதாய சகோதரர்களையும் சகோதரிகளையும் சந்தித்தேன்.

அவர்களின் நிலையை பார்த்து மிகுந்த இரக்கம் கொள்கிறேன்.

கடற்றொழிலாளர்களின் வாழ்வாதார கவலைகளுக்கு 1974ஆம் ஆண்டு செய்யப்பட்ட அநியாய ஒப்பந்தமே காரணம்.

கச்சதீவு சுற்றுவட்டார கடல் பகுதியில் நமது கடற்றொழிலாளர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமை பறிக்கப்பட்டதற்கும் அப்போதைய மத்திய, மாநில அரசுகளே காரணம்.

அன்றிலிருந்து இன்று வரை கடற்றொழிலாளர் சமுதாயம் தொடர்ந்து இன்னல்களை அனுபவித்து வருகிறது.

மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயற்பட்டு, இலங்கை அரசால் கைது செய்யப்படும் கடற்றொழிலாளர்கள் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.

மத்திய அரசை குறை கூறுவதற்கு பதிலாக, தமிழக அரசு ஆக்கபூர்வமான அணுகுமுறையை மேற்கொள்ள வேண்டும்,” என அவர் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...