f0e9cb2a9609e8e8b47dcbf4f046f1565241cfcf252679380eda49246f121e33
செய்திகள்இந்தியா

கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு: 41 பேர் பலி; சி.பி.ஐ. முதல் தகவல் அறிக்கை தாக்கல்! விஜய் கட்சியின் நிர்வாகிகள் மீது வழக்கு

Share

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் நடிகர் விஜய் பங்கேற்ற பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் கடந்த மாதம் (செப் 27) ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக மத்திய புலனாய்வுத் துறை (சி.பி.ஐ.) முதல் தகவல் அறிக்கையை (FIR) கரூர் நீதிமன்றத்தில் பதிவு செய்துள்ளது.

 

இந்த அதிர்ச்சி சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளனர். விசாரணையின் ஒரு பகுதியாக, தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) முக்கிய நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் , கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழகன், இணைச் செயலாளர் நிர்மல்குமார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

சம்பவம் நடந்தபோது கூட்டத்தைக் கட்டுப்படுத்தத் தவறியது மற்றும் பாதுகாப்பு விதிமுறைகளை மீறியது தொடர்பான பிரிவுகளின் கீழ் இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

 

இந்தச் சம்பவம் குறித்து சி.பி.ஐ. மேற்கொண்டு வரும் விசாரணையின் முடிவுகளைப் பொறுத்து, தமிழக வெற்றிக் கழகத்தின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் அமையும் என்றும் கட்சி நிர்வாகிகளுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கோரச் சம்பவம் தமிழக அரசியல் வட்டாரங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Share
தொடர்புடையது
1732463885 students in flood 6
செய்திகள்இலங்கை

சீரற்ற காலநிலை பாதிப்பு: 18 மாவட்டங்கள் பாதிப்பு; மண்சரிவு எச்சரிக்கை நீட்டிப்பு

நாட்டின் சீரற்ற காலநிலை காரணமாக, 18 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் (DMC) தெரிவித்துள்ளது....

MediaFile 7
இலங்கைசெய்திகள்

புழல் சிறையில் உள்ள இலங்கையருக்கு அடிப்படை மருத்துவ உதவி வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு

புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள இலங்கை விசாரணைக் கைதிகளுக்குத் தேவையான அடிப்படை மருத்துவ உதவிகளை வழங்க...

image 5b342b3cea
செய்திகள்இலங்கை

வங்கக்கடல் வானிலை காரணமாக நாகப்பட்டினம்-இலங்கை கப்பல் சேவை தற்காலிகமாக ரத்து

வங்கக்கடலில் நிலவும் மோசமான வானிலை காரணமாக, நாகப்பட்டினம் – இலங்கை (காங்கேசன்துறை) இடையேயான பயணிகள் கப்பல்...

srilankan airline 300x157 1
செய்திகள்இலங்கை

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பணிப்பெண்களைத் தாக்கிய சவுதி பிரஜை கைது

சவுதி அரேபியாவின் ரியாத்தில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்து கொண்டிருந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில்...