24 671f3afd3a539
செய்திகள்அரசியல்இலங்கை

நிபந்தனைகளுடன் போராட்டத்தைத் தொடரலாம்: விமல் வீரவங்சவின் சத்தியாக்கிரகத்திற்கு நீதிமன்றம் அனுமதி!

Share

பத்தரமுல்ல, பெலவத்தையில் உள்ள ‘இசுருபாய’ கல்வி அமைச்சிற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டு வரும் சத்தியாக்கிரகப் போராட்டத்தை அகற்றக் கோரி பொலிஸார் தாக்கல் செய்த மனுவைக் கடுவெல நீதவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

தலங்கம பொலிஸாரினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை ஆராய்ந்த கடுவெல நீதவான் அருண இந்திரஜித் புத்ததாச, போராட்டக்காரர்களை அங்கிருந்து அகற்றுவதற்குப் பதிலாக, சில கடுமையான நிபந்தனைகளுடன் போராட்டத்தைத் தொடர அனுமதி வழங்கியுள்ளார்.

போராட்டமானது சட்டத்திற்கு உட்பட்டு முழுமையாக அமைதியான முறையில் முன்னெடுக்கப்பட வேண்டும்.

பெலவத்தை – பன்னிப்பிட்டிய வீதியைப் பயன்படுத்தும் பொதுமக்களுக்கோ அல்லது பாதசாரிகளுக்கோ எவ்வித இடையூறுகளும் ஏற்படக்கூடாது.

தற்போது நடைபெற்று வரும் உயர்தரப் பரீட்சைக்கு (A/L Exam) எவ்வித பாதிப்பும் ஏற்படக்கூடாது. மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்விப் பணியாளர்களின் கடமைகளுக்குத் தடையாக இருக்கக்கூடாது.

போராட்டத்தின் போது அதிக சத்தம் எழுப்பக்கூடாது. வினாத்தாள் விநியோகம் மற்றும் ஏனைய போக்குவரத்துப் பாதைகளை மறிக்கக் கூடாது. அக்கம் பக்கத்தில் வசிக்கும் மக்களுக்கு எவ்வித அசௌகரியங்களையும் ஏற்படுத்தக் கூடாது.

புதிய கல்விச் சீர்திருத்தங்களை மீளப் பெறக் கோரியும், பிரதமர் ஹரிணி அமரசூரியவின் பதவிலகலை வலியுறுத்தியும் விமல் வீரவங்ச தலைமையில் இந்தப் போராட்டம் நேற்றைய தினம் ஆரம்பிக்கப்பட்டது. பொலிஸார் இதனைத் தடுக்க முயன்ற போதிலும், நீதிமன்றம் போராட்டக்காரர்களின் ஜனநாயக உரிமையை உறுதிப்படுத்தியுள்ளதுடன், பொது ஒழுங்கைப் பேண நிபந்தனைகளை விதித்துள்ளது.

 

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...