images 1 7
செய்திகள்அரசியல்இலங்கை

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம்: பெப்ரவரி 28-க்குள் கருத்துக்களை வழங்குமாறு நீதியமைச்சர் கோரிக்கை!

Share

தற்போதைய பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) நீக்கிவிட்டு, அதற்குப் பதிலாக அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் தொடர்பாகப் பொதுமக்கள் மற்றும் சிவில் அமைப்புகளின் கருத்துக்களைக் கோருவதாக நீதியமைச்சர் ஹர்ஷண நாணயக்கார அறிவித்துள்ளார்.

ஜனாதிபதி சட்டத்தரணி ரியென்சி அர்சகுலரத்ன தலைமையில் நியமிக்கப்பட்ட 17 பேர் கொண்ட நிபுணர் குழு, கடந்த 11 மாதங்களாக மேற்கொண்ட ஆய்வுகளின் அடிப்படையில் மூன்று மொழிகளிலும் இந்தச் சட்டமூலத்தைத் தயாரித்துள்ளது.

மனித உரிமைகள் மற்றும் கருத்துச் சுதந்திரத்தைப் பாதுகாக்கும் வகையில் புதிய சட்டம் அமையும் என அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிக்கமைய இது உருவாக்கப்பட்டுள்ளது.

இது இறுதிச் சட்டமூலம் அல்ல. அமைச்சரவைக்கோ அல்லது நாடாளுமன்றத்திற்கோ இதனைச் சமர்ப்பிப்பதற்கு முன்னதாக, மக்களின் ஆலோசனைகளைப் பெற்று அதில் திருத்தங்களை மேற்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

பாதுகாப்புத் தரப்பினர் மற்றும் காவல்துறையினரின் அதிகாரங்கள் மற்றும் பொறுப்புகள் தொடர்பிலும் பொதுமக்கள் தமது ஆலோசனைகளை முன்வைக்க முடியும். 2026 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதிக்கு முன்னர் தமது கருத்துக்களை அனுப்பி வைக்க வேண்டும்.

நீதியமைச்சின் அதிகாரபூர்வ இணையத்தளமான www.moj.gov.lk இல் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலப் பிரதிகளைப் பெற்றுக்கொள்ளலாம். ஆக்கபூர்வமான கருத்துக்களை நீதியமைச்சின் செயலாளருக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

பெறப்படும் அனைத்து ஆலோசனைகளும் மீண்டும் அதே நிபுணர் குழுவினால் பரிசீலிக்கப்பட்டு, அதன் பின்னரே இறுதிச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என அமைச்சர் உறுதியளித்துள்ளார்.

 

 

Share
தொடர்புடையது
1765326736 Sri Lanka showers Met 6
செய்திகள்இலங்கை

தீவிரமடையும் மழையினால் நீர்நிலைகள் நிரம்புகின்றன: வடகிழக்கு உள்ளிட்ட பகுதிகளில் வெள்ள அபாயம் குறித்து எச்சரிக்கை!

வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள தாழமுக்கம் காரணமாக நாட்டில் மீண்டும் அதிதீவிர மழைவீழ்ச்சி பதிவாகுமாயின், நீர்நிலைகளின் நீர்மட்டம்...

image 870x 66fcf5f77e960
செய்திகள்அரசியல்இலங்கை

தமிழர்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வு: இது வெறும் வாக்குறுதி அல்ல, செயல் வடிவம் பெறும்- அமைச்சர் விஜித ஹேரத் உறுதி!

இலங்கையில் தமிழ் மக்களுக்கு அரசியல் ரீதியான நிரந்தரத் தீர்வு வழங்கப்படும் என்றும், கடந்த காலங்களைப் போலன்றி...

IMG 2110
செய்திகள்உலகம்

சீனாவில் தேவாலயங்கள் மீது கடும் நடவடிக்கை: கட்டிடம் இடிப்பு மற்றும் முக்கிய தலைவர்கள் கைது!

சீனாவில் அரச அங்கீகாரம் பெறாத ‘நிலத்தடி தேவாலயங்கள்’ (Underground Churches) மீது அந்நாட்டு கம்யூனிஸ்ட் அரசு...

images 14 1
செய்திகள்உலகம்

வெனிசுவேலா ஜனாதிபதி கைது செய்யப்பட்டது ஐநா கோட்பாடுகளுக்கு எதிரானது – அமைச்சர் பிமல் ரத்நாயக்க கண்டனம்!

ஜனநாயக ரீதியாகத் தெரிவு செய்யப்பட்ட வெனிசுவேலா ஜனாதிபதியை அமெரிக்கா கைது செய்துள்ளமையானது சர்வதேச சட்டங்களையும் ஐக்கிய...