Jonson
செய்திகள்அரசியல்இலங்கை

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் மற்றும் அவரது இரு மகன்களுக்கு ஜனவரி 23 வரை மீண்டும் விளக்கமறியல்!

Share

சதொச நிறுவனத்திற்குச் சொந்தமான லொறியை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் அவரது இரு மகன்கள் உள்ளிட்ட ஐந்து சந்தேகநபர்களின் விளக்கமறியல் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர்கள் இன்று (09) வத்தளை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர். இதன்போது, வழக்கை விசாரித்த நீதவான், ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, அவரது மகன்களான யோஹான் பெர்னாண்டோ மற்றும் ஜெரோம் கென்னத் பெர்னாண்டோ உள்ளிட்ட 05 பேரையும் வரும் ஜனவரி 23-ஆம் தேதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சராகப் பதவி வகித்த காலத்தில், சதொச நிறுவனத்திற்குச் சொந்தமான லொறி மற்றும் சாரதியைத் தனது குடும்பத்திற்குச் சொந்தமான எதனோல் (Ethanol) நிறுவனத்தின் தேவைகளுக்காக முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

இதன் மூலம் அரசாங்கத்திற்குச் சுமார் 2.5 இலட்சம் ரூபாய் நிதி இழப்பு ஏற்படுத்தப்பட்டதாக நிதி குற்ற விசாரணைப் பிரிவு (FCID) நீதிமன்றத்தில் தெரிவித்தது.

இச்சம்பவம் தொடர்பாகச் சதொச நிறுவனத்தின் முன்னாள் போக்குவரத்து முகாமையாளர் இந்திக ரத்னமாலல மற்றும் முன்னாள் நிறைவேற்று பணிப்பாளர் முகமது ஜாகிர் ஆகியோரும் விளக்கமறியலில் உள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ் இந்த வழக்குத் தொடரப்பட்டுள்ளதால், பிணை வழங்குவது குறித்து இன்றைய அமர்வில் எவ்வித சாதகமான முடிவும் எடுக்கப்படவில்லை.

 

 

Share
தொடர்புடையது
Untitled 53
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கை – மலேசியா இடையே புதிய வான்வழி இணைப்பு: பாட்டிக் ஏர் தனது சேவையைத் தொடங்கியது!

மலேசியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான விமான இணைப்பை வலுப்படுத்தும் ஒரு புதிய மைல்கல்லாக, பாட்டிக் ஏர் மலேசியா...

Untitled 52
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தொட்டகமுவ மும்முறை கொலை வழக்கு: 18 ஆண்டுகளின் பின் நான்கு சந்தேக நபர்கள் விடுதலை!

கடந்த 2006-ஆம் ஆண்டு பாலப்பிட்டிய, தொட்டகமுவ பகுதியில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் உட்பட மூவர் சுட்டுக்கொல்லப்பட்ட...

Untitled 51
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யக்கல கட்சி அலுவலக விவகாரம்: ஜே.வி.பி-யிடம் இருந்து முன்னிலை சோசலிசக் கட்சியிடம் ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவு!

யக்கல (Yakkala) பகுதியில் அமைந்துள்ள முன்னிலை சோசலிசக் கட்சியின் (FLSP) அலுவலகத்தை ஜனதா விமுக்தி பெரமுன...

Untitled 50
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தலைவர் சரத் கணேகோடா ராஜினாமா: புதிய பதில் தலைவர் நியமனம்!

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் (SriLankan Airlines) மற்றும் ஸ்ரீலங்கன் கேட்டரிங் ஆகிய நிறுவனங்களின் தலைவராகப் பணியாற்றி வந்த...