Jonson
செய்திகள்அரசியல்இலங்கை

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் மற்றும் அவரது இரு மகன்களுக்கு ஜனவரி 23 வரை மீண்டும் விளக்கமறியல்!

Share

சதொச நிறுவனத்திற்குச் சொந்தமான லொறியை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் அவரது இரு மகன்கள் உள்ளிட்ட ஐந்து சந்தேகநபர்களின் விளக்கமறியல் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர்கள் இன்று (09) வத்தளை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர். இதன்போது, வழக்கை விசாரித்த நீதவான், ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, அவரது மகன்களான யோஹான் பெர்னாண்டோ மற்றும் ஜெரோம் கென்னத் பெர்னாண்டோ உள்ளிட்ட 05 பேரையும் வரும் ஜனவரி 23-ஆம் தேதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சராகப் பதவி வகித்த காலத்தில், சதொச நிறுவனத்திற்குச் சொந்தமான லொறி மற்றும் சாரதியைத் தனது குடும்பத்திற்குச் சொந்தமான எதனோல் (Ethanol) நிறுவனத்தின் தேவைகளுக்காக முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

இதன் மூலம் அரசாங்கத்திற்குச் சுமார் 2.5 இலட்சம் ரூபாய் நிதி இழப்பு ஏற்படுத்தப்பட்டதாக நிதி குற்ற விசாரணைப் பிரிவு (FCID) நீதிமன்றத்தில் தெரிவித்தது.

இச்சம்பவம் தொடர்பாகச் சதொச நிறுவனத்தின் முன்னாள் போக்குவரத்து முகாமையாளர் இந்திக ரத்னமாலல மற்றும் முன்னாள் நிறைவேற்று பணிப்பாளர் முகமது ஜாகிர் ஆகியோரும் விளக்கமறியலில் உள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ் இந்த வழக்குத் தொடரப்பட்டுள்ளதால், பிணை வழங்குவது குறித்து இன்றைய அமர்வில் எவ்வித சாதகமான முடிவும் எடுக்கப்படவில்லை.

 

 

Share
தொடர்புடையது
IMG 9924 1024x683 1
செய்திகள்உலகம்

சூடானில் மார்ச் மாதத்துடன் உணவு இருப்பு தீரும் அபாயம்: 700 மில்லியன் டொலர் அவசர நிதியைக் கோருகிறது ஐ.நா!

உள்நாட்டுப் போரினால் பேரழிவைச் சந்தித்துள்ள சூடானில், உடனடியாகக் கூடுதல் நிதி உதவி வழங்கப்படாவிட்டால் மிக மோசமான...

10aa5a71cfd76011153a66552523da5f7560cde2db35ee6d414158cd57f94959
உலகம்செய்திகள்

டோக்கியோவில் மின்தடையால் ரயில் சேவைகள் முடக்கம்: 6.7 லட்சம் பயணிகள் பாதிப்பு!

ஜப்பானின் தலைநகர் டோக்கியோவில் இன்று (16) ஏற்பட்ட திடீர் மின்தடை மற்றும் தீ விபத்து காரணமாக...

1735040735 c
செய்திகள்இலங்கை

கிராம அலுவலர் மீது தாக்குதல்: நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரனை ஜனவரி 20-ல் ஆஜர்ப்படுத்த நீதிமன்றம் உத்தரவு!

கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் இன்று (16) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வழக்கின் அடிப்படையில், நாடாளுமன்ற உறுப்பினர் க....

Keheliya Rambukwella
செய்திகள்இலங்கை

கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் குடும்பத்தினருக்கு எதிராக மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை: நீதவான் நீதிமன்ற வழக்கு முடிவு!

முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, அவரது புதல்வர் ரமித் ரம்புக்வெல்ல மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு எதிராகப்...