tamilni 163 scaled
இந்தியாசெய்திகள்

பெயரிலே பிழை.., விஜயின் கட்சி பெயர் குறித்து ஜேம்ஸ் வசந்தன் விளக்கம்

Share

பெயரிலே பிழை.., விஜயின் கட்சி பெயர் குறித்து ஜேம்ஸ் வசந்தன் விளக்கம்

நடிகர் விஜயின் கட்சி பெயரிலே இலக்கண பிழை இருப்பதாக இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் விளக்கமளித்துள்ளார்.

விஜய் தன்னுடைய கட்சிக்கு “தமிழக வெற்றி கழகம்” என்று பெயர் வைத்திருக்கிறார்.

இந்த பெயரை விஜய் அறிவித்ததில் இருந்து விஜயின் மன்ற உறுப்பினர்கள், ரசிகர்கள் என அனைவரும் உற்சாகத்தில் இருக்கிறார்கள்.

கட்சியின் பெயரை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்த விஜய் வருகின்ற 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் நேரடியாக போட்டியிடுவோம் என்று கூறியிருக்கிறார்.

விஜயின் புதிய அரசியல் கட்சிக்கு பல்வேறு அரசியல் பிரபலங்களும் சினிமா பிரபலங்களும் வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தனர்.

இந்நிலையில், விஜயின் கட்சி பெயரிலே இலக்கண பிழை இருப்பதாக இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கூறி விளக்கமளித்துள்ளார்.

இதுகுறித்து பதிவிட்டுள்ள ஜேம்ஸ் வசந்தன் ” ‘தமிழக வெற்றி கழகம்’ இது அரசியல் பதிவு அல்ல. மொழிப்பதிவு. ‘வெற்றி கழகம்’ என்பது அல்ல. அல்லது ‘வெற்றிக் கழகம்’ என்பது சரியா? எனக்கு இலக்கண அறிவு கிடையாது.

ஆகையால், இதில் ஆழ்ந்த அறிவுகொண்டவர் விளக்கலாம். நான் அறிந்தவரை, அது ‘வெற்றிக் கழகம்’ என்றே இருக்கவேண்டும் என்று தோன்றுகிறது.

‘வெற்றிக் கழகம்’ என்பது வெற்றியின் கழகம், வெற்றி பெறும் கழகம், வெற்றி அடையும் கழகம் என்கிற பொருளில்தானே இடப்பட்டிருக்கிறது. அப்படியெனில், வலி மிகுந்துதானே ஆகவேண்டும்? தேர்ந்தவர் உறுதிசெய்யலாம்” என்று பதிவிட்டுள்ளார்

Share
தொடர்புடையது
world 53
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வெல்லம்பிட்டியில் 4 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு: இருவர் கைது

கொழும்பு, வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் (PNB) நேற்று (மே...

world 52
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பில் பிடிபட்ட 74 வியட்நாமியர்களுக்கு மே 14 வரை விளக்கமறியல்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கொழும்பு, கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள உத்தராநந்த மாவத்தையில் அமைந்துள்ள குடியிருப்பு வளாகம் ஒன்றில் வைத்து, இணையவழி...

world 51
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஊழலுக்கு எதிராகக் குரல் கொடுத்துப் பதவி விலகிய NPP உறுப்பினர்: ராஜினாமா கடிதம் கசிந்த விவகாரத்தில் சர்ச்சை

தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சியின் குருநாகல் மாநகர சபை உறுப்பினர் பி.டபிள்யூ. பிரேமச்சந்திரா, தனது...

world 50
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தோல் புற்றுநோய் அபாயம்: காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அவதானம் தேவை

இலங்கையில் தோல் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகச் சுகாதார மேம்பாட்டுப் பணியகம் எச்சரிக்கை விடுத்துள்ளது....