tamilni 163 scaled
இந்தியாசெய்திகள்

பெயரிலே பிழை.., விஜயின் கட்சி பெயர் குறித்து ஜேம்ஸ் வசந்தன் விளக்கம்

Share

பெயரிலே பிழை.., விஜயின் கட்சி பெயர் குறித்து ஜேம்ஸ் வசந்தன் விளக்கம்

நடிகர் விஜயின் கட்சி பெயரிலே இலக்கண பிழை இருப்பதாக இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் விளக்கமளித்துள்ளார்.

விஜய் தன்னுடைய கட்சிக்கு “தமிழக வெற்றி கழகம்” என்று பெயர் வைத்திருக்கிறார்.

இந்த பெயரை விஜய் அறிவித்ததில் இருந்து விஜயின் மன்ற உறுப்பினர்கள், ரசிகர்கள் என அனைவரும் உற்சாகத்தில் இருக்கிறார்கள்.

கட்சியின் பெயரை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்த விஜய் வருகின்ற 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் நேரடியாக போட்டியிடுவோம் என்று கூறியிருக்கிறார்.

விஜயின் புதிய அரசியல் கட்சிக்கு பல்வேறு அரசியல் பிரபலங்களும் சினிமா பிரபலங்களும் வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தனர்.

இந்நிலையில், விஜயின் கட்சி பெயரிலே இலக்கண பிழை இருப்பதாக இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கூறி விளக்கமளித்துள்ளார்.

இதுகுறித்து பதிவிட்டுள்ள ஜேம்ஸ் வசந்தன் ” ‘தமிழக வெற்றி கழகம்’ இது அரசியல் பதிவு அல்ல. மொழிப்பதிவு. ‘வெற்றி கழகம்’ என்பது அல்ல. அல்லது ‘வெற்றிக் கழகம்’ என்பது சரியா? எனக்கு இலக்கண அறிவு கிடையாது.

ஆகையால், இதில் ஆழ்ந்த அறிவுகொண்டவர் விளக்கலாம். நான் அறிந்தவரை, அது ‘வெற்றிக் கழகம்’ என்றே இருக்கவேண்டும் என்று தோன்றுகிறது.

‘வெற்றிக் கழகம்’ என்பது வெற்றியின் கழகம், வெற்றி பெறும் கழகம், வெற்றி அடையும் கழகம் என்கிற பொருளில்தானே இடப்பட்டிருக்கிறது. அப்படியெனில், வலி மிகுந்துதானே ஆகவேண்டும்? தேர்ந்தவர் உறுதிசெய்யலாம்” என்று பதிவிட்டுள்ளார்

Share
தொடர்புடையது
12 18
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நானுஓயா கிளாஸ்கோ தோட்டத்தில் தீ விபத்து: குடியிருப்பு முற்றாக எரிந்து சாம்பல்!

நுவரெலியா, நானுஓயா பகுதியில் உள்ள கிளாஸ்கோ தோட்டத்தின் மத்திய பிரிவில் இன்று (மார்ச் 21, 2026)...

11 19
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தனியார் பேருந்து சேவைகள் 50 சதவீதம் குறையும் அபாயம்: எரிபொருள் தட்டுப்பாட்டால் மக்கள் தவிப்பு!

இலங்கை முழுவதும் தனியார் பேருந்துகளுக்கான எரிபொருள் விநியோகத்தில் நிலவும் சீரற்ற தன்மை காரணமாக, பொதுப் போக்குவரத்து...

10 18
உலகம்செய்திகள்

முதலீட்டாளர்களைத் தவறாக வழிநடத்திய ஈலோன் மஸ்க்: அமெரிக்க நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!

கடந்த 2022-ஆம் ஆண்டு அப்போதைய ட்விட்டர் (தற்போது X) நிறுவனத்தைக் கையகப்படுத்தும் நடவடிக்கையின் போது, அதன்...

09 18
செய்திகள்இலங்கைபிராந்தியம்

முன்னாள் ஆட்சியாளர்களுக்குத் தெரிந்தே உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடந்ததா? அருட்தந்தை ரோஹான் சில்வா கேள்வி!

2019-ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் குறித்து, முன்னாள் ஆட்சியாளர்கள் மற்றும் அரசியல்...