IMG 2581 1170x658 1
செய்திகள்அரசியல்இலங்கை

தையிட்டி எங்கள் சொத்து; விகாரையை அகற்று – யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் கண்டனப் போராட்டம்!

Share

யாழ்ப்பாணம், தையிட்டிப் பகுதியில் அமையப்பெற்றுள்ள விகாரையை அகற்றக் கோரியும், அங்கு இடம்பெறும் நில ஆக்கிரமிப்புகளுக்கு எதிராகவும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இன்று பல்கலைக்கழக பிரதான நுழைவாயிலுக்கு முன்பாக மாபெரும் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

“தையிட்டி எங்கள் சொத்து – எமது காணிகளை அபகரிக்காதே” என மாணவர்கள் முழக்கமிட்டதோடு, தனியார் காணிகளில் அமையப்பெற்றுள்ள சட்டவிரோதக் கட்டுமானங்களை உடனடியாக அகற்ற வேண்டும் என வலியுறுத்தினர்.

காவல்துறை அடக்குமுறை: தையிட்டியில் நேற்று (21) இடம்பெற்ற அமைதிப் போராட்டத்தின் போது, பொலிஸார் நடந்துகொண்ட விதம் “காட்டுமிரண்டித்தனமானது” என மாணவர்கள் சாடினர்.

அமைதி வழியில் போராடியவர்கள் அநியாயமாகக் கைது செய்யப்பட்டமையை வன்மையாகக் கண்டித்த மாணவர்கள், கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுதலை செய்யக் கோரினர்.

பல்கலைக்கழக சமூகத்தினர் மற்றும் மாணவர்கள் திரளாகக் கலந்துகொண்ட இந்தப் போராட்டத்தினால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. நில ஆக்கிரமிப்பு மற்றும் சிவில் உரிமைகளுக்காகத் தொடர்ந்து குரல் கொடுப்போம் என மாணவர்கள் இதன்போது தெரிவித்தனர்.

 

 

Share
தொடர்புடையது
MediaFile 4 2
விளையாட்டுசெய்திகள்

உலகக் கிண்ணப் போட்டிகள்: இந்தியப் பிரதிநிதிக்கு விசா மறுப்பு! பங்களாதேஷின் அதிரடி முடிவால் ஐசிசி அதிர்ச்சி.

இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரை முன்னிட்டு, இந்தியா மற்றும் பங்களாதேஷ் நாடுகளுக்கு இடையே நிலவும்...

24 674091ff36e1e
செய்திகள்இலங்கை

அரச துறைக்கு 75,000 புதிய ஊழியர்கள்: ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அதிரடி அறிவிப்பு!

நாட்டின் அரச நிர்வாகக் கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கில், அரச துறைக்கு புதிதாக 75,000 ஊழியர்களை இணைத்துக்கொள்ள...

1715871834 1715869628 pakis L
செய்திகள்இலங்கை

சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை: 11 ஆண்டுகளில் 46,000-க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் விசாரிக்கப்படவில்லை!

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு (National-Child-Protection-Authority) சிறுவர்களுக்கு நடந்த மோசமான செயற்பாடுகள் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளில்...

iran 1
உலகம்செய்திகள்

ஈரானில் உக்கிரமடையும் மக்கள் போராட்டம்: 5,000 பேர் உயிரிழப்பு – இணையம் துண்டிப்பு, ஆயிரக்கணக்கானோர் கைது!

ஈரானில் நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் குழப்பங்களுக்கு எதிராக கடந்த மாதம்...