பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவை இலக்கு வைத்து முன்னெடுக்கப்படும் தனிநபர் மற்றும் பாலின ரீதியான வன்முறைத் தாக்குதல்களைத் தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி வன்மையாகக் கண்டித்துள்ளார்.
தமது உத்தியோகபூர்வ முகநூல் (Facebook) பதிவின் மூலம் அவர் பிரதமரின் ஆளுமையைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் வகையில் நடத்தப்படும் தனிநபர் விமர்சனங்கள் மற்றும் பாலின அடிப்படையிலான இழிவுபடுத்தல்கள் நாகரீகமற்றவை.
அண்மையில் தரம் 06 பாடப்புத்தகத்தில் கண்டறியப்பட்ட தவறு குறித்து அரசாங்கம் பொறுப்புடன் நடந்துகொண்டது. அந்தத் தவறை வெளிப்படையாக ஒப்புக்கொண்டதுடன், அது குறித்து முறையான காவல்துறை விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
தவறை மறைக்காமல், அதனைச் சீர்செய்ய நடவடிக்கை எடுப்பது ஒரு பொறுப்புள்ள மற்றும் வெளிப்படையான அரசாங்கத்தின் அடையாளம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசாங்கத்தின் குறைபாடுகளைச் சுட்டிக்காட்டுவதற்குப் பதிலாக, தனிப்பட்ட முறையில் பிரதமரைத் தாக்குவது முறையற்றது எனவும், இவ்வாறான நேர்மறையான மாற்றங்களை மக்கள் ஆதரிக்க வேண்டும் எனவும் அவர் தனது பதிவில் வலியுறுத்தியுள்ளார்.