f9249630 b942 11f0 94ea 0d369b0104d5.jpg
செய்திகள்இந்தியா

விண்வெளித் துறையில் இந்தியா சாதனை: ‘பாகுபலி’ விண்கலம் மூலம் அமெரிக்க செயற்கைக்கோள் வெற்றிகரமாக ஏவப்பட்டது!

Share

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (ISRO) வலிமைமிக்க விண்கலமான எல்.வி.எம்-3 (LVM3-M6), இன்று காலை 8:55 மணிக்கு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து அமெரிக்காவின் அதிநவீன செயற்கைக்கோளைச் சுமந்து வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.

‘பாகுபலி’ என அழைக்கப்படும் 43.5 மீற்றர் உயரமுள்ள எல்.வி.எம்-3 விண்கலம், இரண்டு வலிமையான பூஸ்டர்களுடன் விண்ணில் ஏவப்பட்டது.

அமெரிக்காவின் ‘ஏ.எஸ்.டி ஸ்பேஸ் மொபைல்’ நிறுவனத்திற்குச் சொந்தமான ‘புளூபேர்ட் 6’ (BlueBird 6) என்ற அடுத்த தலைமுறை தகவல் தொடர்பு செயற்கைக்கோளை இது சுமந்து சென்றது.

விண்ணில் ஏவப்பட்ட 15 நிமிடங்களில், பூமியிலிருந்து 520 கிலோமீற்றர் உயரத்தில் உள்ள சுற்றுப்பாதையில் செயற்கைக்கோள் மிகத் துல்லியமாக நிலைநிறுத்தப்பட்டது.

இந்த ‘புளூபேர்ட் 6’ செயற்கைக்கோளானது, சாதாரண ஸ்மார்ட் கைபேசிகளுக்கு விண்வெளியில் இருந்து நேரடியாக பிரோட்பேண்ட் (Broadband) இணைய சேவையை வழங்கும் திறன் கொண்டது. இதற்கு எவ்வித மேலதிக உபகரணங்களும் தேவையில்லை என்பதால், உலகத் தொலைத்தொடர்பு துறையில் இது ஒரு மைல்கல்லாகக் கருதப்படுகிறது.

இந்திய மண்ணிலிருந்து ஏவப்பட்ட மிக அதிக எடையுள்ள செயற்கைக்கோள் இதுவாகும். இதன் மூலம் உலகளாவிய வணிக ரீதியான விண்வெளிச் சந்தையில் இந்தியாவின் நம்பகத்தன்மை மற்றும் வலிமை மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளதாக விண்வெளி ஆய்வாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

 

 

Share
தொடர்புடையது
images 10 4
செய்திகள்இலங்கை

தனியார் துறை ஊழியர்களுக்கும் ஓய்வூதியம்? அரசாங்கம் புதிய திட்டம் குறித்து ஆலோசனை!

தனியார் துறை ஊழியர்களின் எதிர்கால நலனைக் கருத்திற்கொண்டு அவர்களுக்குப் புதிய ஓய்வூதியத் திட்டமொன்றை (Pension Scheme)...

sajith
செய்திகள்இலங்கை

நாடாளுமன்றத்தில் பரபரப்பு: பெண் ஊழியர் துன்புறுத்தல் அறிக்கை ஏன் மறைக்கப்படுகிறது? சஜித் பிரேமதாச கேள்வி!

நாடாளுமன்ற பெண் ஊழியர்கள் எதிர்கொண்ட பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பான விசாரணை அறிக்கை, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படாமல்...

செய்திகள்இலங்கை

இலங்கை மின்சார சபை மறுசீரமைப்பு இறுதிக்கட்டத்தில்! ஊழியர்களின் நலன்களுக்கு முக்கியத்துவம் என அறிவிப்பு!

நாட்டின் எதிர்கால மின்சாரத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கில் திட்டமிடப்பட்டுள்ள இலங்கை மின்சார சபையின் (CEB)...

96b6d210 5408 11ef b8c3 f76c0a5f70a8.jpg
செய்திகள்உலகம்

யுனுஸின் ஆட்சி சட்டவிரோதமானது! – இந்தியாவிலிருந்து ஷேக் ஹசீனா விடுத்த முதல் பகிரங்க அறிக்கை!

கடந்த 2024-ஆம் ஆண்டு பங்களாதேஷில் ஏற்பட்ட மக்கள் புரட்சியைத் தொடர்ந்து நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில்...