25 6909005a2a5b7
செய்திகள்உலகம்

பிணைக்கைதிகள் உடல்கள் ஒப்படைப்பைத் தொடர்ந்து: 45 பலஸ்தீனர்களின் உடல்களை இஸ்ரேல் விடுவித்தது! 

Share

ஹமாஸிடமிருந்து மூன்று இஸ்ரேலியப் பிணைக்கைதிகளின் உடல்கள் ஒப்படைக்கப்பட்டதைத் தொடர்ந்து, இஸ்ரேல் 45 பலஸ்தீனர்களின் உடல்களை ஒப்படைத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதனை காஸா அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஒவ்வொரு பிணைக்கைதிகள் உடல்கள் விடுவிக்கப்படும் போதும், இஸ்ரேல் தரப்பிடமிருந்து 15 பலஸ்தீனர்களின் உடல்கள் விடுவிக்கப்பட்டு வருகின்றன. இதன் அடிப்படையில், இதுவரை மொத்தம் 270 பலஸ்தீனர்களின் உடல்களை இஸ்ரேல் ஒப்படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஹமாஸிடமிருந்து ஒப்படைக்கப்பட்ட மூன்று பிணைக்கைதிகளின் உடல்களும், கடந்த 2023 இல் அப்படையினரால் நடத்தப்பட்ட தாக்குதல்களில் கொல்லப்பட்ட இஸ்ரேல் வீரர்கள் மூவரது உடல்கள் என இஸ்ரேலிய அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளனர்.

கடந்த ஒக்டோபர் பத்தாம் திகதி காஸா போர்நிறுத்த ஒப்பந்தம் நடைமுறையானதிலிருந்து ஹமாஸிடமிருந்து இதுவரை 20 பிணைக்கைதிகளின் உடல்கள் இஸ்ரேலிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. மேலும், எட்டு உடல்கள் இன்னும் ஹமாஸிடம் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
Untitled 67
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ். இணுவில் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் முதியவர் சடலமாக மீட்பு!

யாழ்ப்பாணம், இணுவில் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் இன்று (மார்ச் 31, 2026) முதியவர் ஒருவரின் சடலம்...

Untitled 66
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ரஷ்ய பிரதி வெளிவிவகார அமைச்சர் ஏண்ட்ரே ருடென்கோ உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கை வருகை!

ரஷ்ய அரசாங்கத்தின் பிரதி வெளிவிவகார அமைச்சர் ஏண்ட்ரே ருடென்கோ (Andrey Rudenko), 05 நாட்கள் உத்தியோகபூர்வ...

Untitled 65
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கைச் சுற்றுலாவில் வளர்ச்சி: மார்ச் மாதத்தில் மாத்திரம் 1.7 இலட்சத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகை!

இலங்கையின் சுற்றுலாத்துறை நடப்பு ஆண்டில் பாரிய வளர்ச்சியை நோக்கி நகர்ந்து வரும் நிலையில், கடந்த மார்ச்...

Untitled 64
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மாநகர சபைகள் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது!

மீதொட்டமுல்ல “பொதுவில் கும்புர” எனும் காணியில் சட்டவிரோதமான முறையில் கழிவுகளைக் கொட்டியதன் மூலம், கொழும்பு மாநகர...