இராணுவம் உட்பட 5 பேர் யாழில் கைது 1
செய்திகள்இலங்கை

நாடளாவிய ரீதியில் அதிரடிச் சோதனை: ஒரே நாளில் 578 பேர் கைது – போக்குவரத்து விதிமீறல்களுக்காக 4,000 பேருக்கு எதிராக வழக்கு!

Share

குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தும் நோக்கில் பொலிஸாரால் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் நாளாந்த சோதனைகளின் போது, நேற்று (19) மாத்திரம் 578 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று ஒரே நாளில் நாடு முழுவதும் 29,504 பேர் பொலிஸாரால் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இந்த அதிரடி நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்டவர்களின் விபரங்கள் வருமாறு:

பல்வேறு குற்றங்களுடன் நேரடியாகத் தொடர்புடைய 16 பேர் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். நீதிமன்றத்தால் திறந்த பிடியாணை (Open Warrants) பிறப்பிக்கப்பட்டிருந்த 282 பேர் மற்றும் மேலதிகமாக 177 பேர் என மொத்தம் 459 பிடியாணைதாரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போக்குவரத்துச் சட்டங்களை மீறிய 4,384 பேருக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வீதிப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட சோதனைகளில் குடிபோதையில் வாகனம் செலுத்திய 427 பேர் , கவனக்குறைவாக வாகனம் செலுத்தியோர் 06 பேர் சிக்கியுள்ளனர்.

குற்றச் செயல்களைக் குறைக்கவும், போதைப்பொருள் விநியோகச் சங்கிலியைத் துண்டிக்கவும் இந்த நாளாந்த சோதனைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் எனப் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. பொதுமக்கள் இத்தகைய சோதனைகளின் போது பாதுகாப்புப் பிரிவினருக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

 

 

Share
தொடர்புடையது
25 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அரச சுபநேரக் குழுவின்மையால் சர்ச்சை: ‘சர்வஜன அதிகாரம்’ வெளியிட்ட புத்தாண்டு சுபநேரப் பத்திரம்!

2024 ஆம் ஆண்டில் கலாசார திணைக்களத்தால் அரச சுபநேரக் குழு கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து, அரசாங்கம் இதுவரையில்...

24 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையின் சுகாதார சேவையை வலுப்படுத்த புதிய முயற்சி: 2,918 செவிலியர் மாணவர்கள் இணைப்பு!

இலங்கையின் சுகாதாரத் துறையை மேம்படுத்தும் நோக்கில், புதிய மாணவ செவிலியர் பயிற்சிக்காக 2,918 பேரை இணைத்துக்கொள்ளும்...

23 8
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மத்திய கிழக்கில் அமைதியை வலியுறுத்தும் ஹமாஸ்: ஈரானிடம் விடுத்த கோரிக்கை!

மத்திய கிழக்கில் இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையே போர் தீவிரமடைந்து வரும்...

22 11
செய்திகள்உலகம்

புதிய தலைவர் மொஜ்தபா காமெனிக்கு அச்சுறுத்தல் விடுத்தால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் – ஈரான் எச்சரிக்கை!

ஈரானின் புதிய உயர்மட்டத் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள மொஜ்தபா காமெனியை (Mojtaba Khamenei) இலக்கு வைத்து அமெரிக்காவோ...