1276730 0.jpeg
செய்திகள்உலகம்

ஈரான் சிறைப்பிடித்த எண்ணெய்க் கப்பல் ‘தலாரா’ விடுவிப்பு: 21 பணியாளர்களும் பாதுகாப்பாக உள்ளனர்!

Share

ஹாா்முஸ் நீரிணைப் பகுதியில் ஈரான் கடந்த வாரம் சிறைப்பிடித்த, மாா்ஷல் தீவுகளின் கொடியேற்றப்பட்ட ‘தலாரா’ (Talara) என்ற எண்ணெய்க் கப்பலை தற்போது விடுவித்துள்ளது.

இது குறித்து கொலம்பியா ஷிப் (Columbia Shipmanagement) நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது. எண்ணெய்க் கப்பல் ‘தலாரா’வை ஈரான் விடுவித்துள்ளது.

அதில் இருந்த 21 பணியாளர்களும் பாதுகாப்பாகவும் நல்ல உற்சாகத்துடனும் உள்ளனா். அவா்களது குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. கப்பல் இப்போது வழக்கமான பணிகளைத் தொடரத் தயாராக உள்ளது.

கப்பல், பணியாளா்கள், நிா்வாகிகள் அல்லது உரிமையாளா்கள் மீது ஈரான் எந்தக் குற்றச்சாட்டையும் சுமத்தவில்லை என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் அஜ்மான் துறைமுகத்தில் இருந்து சிங்கப்பூா் நோக்கிச் சென்று கொண்டிருந்த ‘தலாரா’ கப்பலை, ஹாா்முஸ் நீரிணைப் பகுதியில் ஈரான் கடந்த நவம்பர் 14ஆம் திகதி சிறைப்பிடித்தமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...