External Affairs Minister S Jaishankar calls on Sri Lankan President Anura Kumara Dissanayake in Colombo on Tuesday. ANI
செய்திகள்இலங்கை

இலங்கை அரசியலில் இராஜதந்திரப் போர்: இந்தியாவின் $450 மில்லியன் நிதியுதவியும், சீனாவின் அடுத்தகட்ட நகர்வும்!

Share

இலங்கைக்கு அண்மையில் விஜயம் மேற்கொண்ட இந்திய மற்றும் சீன உயர்மட்டத் தூதுவர்களின் சந்திப்புகள் குறித்து இதுவரை வெளிவராத பல முக்கிய தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், ஜனாதிபதி மற்றும் அரசாங்கத் தலைவர்களைச் சந்தித்த வேளையில், ஒரு முக்கிய முன்னேற்றம் இடம்பெற்றுள்ளது.

அனைத்து அதிகாரிகளும் வெளியேற்றப்பட்ட பின், ஜனாதிபதியும் ஜெய்சங்கரும் சுமார் அரை மணி நேரம் தனிப்பட்ட முறையில் கலந்துரையாடினர்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் சிறப்புச் செய்தியை இதன்போது ஜெய்சங்கர் கையளித்தார். இலங்கையின் பொருளாதார நலனுக்காக 450 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான எதிர்பாராத நிவாரணப் பொதியை வழங்க இந்தியா உறுதியளித்துள்ளதாகத் தெரியவருகிறது.

இந்திய அமைச்சரின் வருகையைத் தொடர்ந்து, சீன உயர்மட்டத் தூதுவர் வாங் ஜுன்ஷெங் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டார்.

அண்மைய சூறாவளிப் பேரழிவிலிருந்து மீள சீனா ஒரு பெரிய திட்டத்தின் கீழ் உதவத் தயாராக இருப்பதாக அவர் ஜனாதிபதியிடம் உறுதியளித்துள்ளார்.

எதிர்வரும் நாட்களில் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். அவரை ஜனாதிபதி, பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோர் நேரில் சென்று வரவேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த விஜயத்தின் போது, இலங்கையில் சீனா முன்னெடுக்கவுள்ள பாரிய செயற்திட்டம் குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையின் அமைவிட முக்கியத்துவம் கருதி, இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளும் போட்டி போட்டுக்கொண்டு உதவிகளையும் முதலீடுகளையும் வழங்கி வருவது, பிராந்திய அரசியலில் இலங்கையின் பலத்தை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

 

 

Share
தொடர்புடையது
10 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையர்களின் அதீத சீனிப் பயன்பாடு: ஈறு நோய் பாதிப்பு அதிகரிப்பு – எச்சரிக்கை விடுத்த வைத்தியர்!

இலங்கையில் ஒவ்வொரு இரண்டு பெரியவர்களில் ஒருவருக்கு ஈறு தொடர்பான நோய்கள் இருப்பதாக வாய் சுகாதார விசேட...

09 6
செய்திகள்இலங்கை

பேரிடர் மீட்புப் பணிகளில் ஈடுபட்ட அரச அதிகாரிகளுக்கு விசேட கொடுப்பனவு: பாதுகாப்பு அமைச்சின் அறிவிப்பு!

நாட்டின் பல்வேறு பகுதிகளில் அண்மைக்காலமாக ஏற்பட்ட பேரிடர் நிலைகளின் போது, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில்...

08 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் விநியோகத்தை எளிமைப்படுத்தும் புதிய செயலி: யாழ். இந்துக் கல்லூரி மாணவரின் புத்தாக்கம்!

எரிபொருள் விநியோகத்தில் நிலவும் சவால்களைத் தொழில்நுட்ப ரீதியாகத் தீர்க்கும் நோக்கில், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி உயர்தர...

01 6
செய்திகள்உலகம்

அவுஸ்திரேலியாவில் இலங்கைப் பெண் மற்றும் அவரது துணைவர் சடலமாக மீட்பு: காவல்துறை விசாரணை!

அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்திலுள்ள லோட்ரோப் பள்ளத்தாக்கு பகுதியில், ஹேர்ன்ஸ் ஓக் (Hernes Oak) எனும் கிராமப்புறப்...