mlam hizbullah
செய்திகள்இலங்கை

மண்முனைப்பற்று முஸ்லிம் மக்களின் காணி உறுதிப் பிரச்சினை: நீதித்துறை விசாரணைக்கு பிரதி அமைச்சர் உத்தரவாதம்!

Share

மண்முனைப்பற்று பிரதேச செயலகப் பிரிவில் அரச காணிகளில் வசித்துவரும் முஸ்லிம் மக்களுக்கு எதிராக மட்டும் வழக்குத் தொடரப்படுவதாகத் தெரிவிக்கப்படும் முறைப்பாடு தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்படும் என காணி மற்றும் நீர்ப்பாசனப் பிரதி அமைச்சர் அரவிந்த செனரத் விதாரண தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 21) இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினா நேரத்தில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எம்.பி.யான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

மண்முனைப்பற்று பிரதேச செயலகப் பிரிவில் அரச காணிகளில் 30% முஸ்லிம்கள் வாழ்ந்து வருகின்றனர். அவர்களுக்குப் பல ஆண்டுகளாகக் காணி உறுதி அல்லது காணி அனுமதிப்பத்திரம் வழங்கப்படாமல் அவர்கள் புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர். மேலும், அங்கு வாழும் முஸ்லிம்களுக்கு எதிராக மாத்திரம் வழக்குத் தொடுக்கப்பட்டு வருவதாகவும், இதைக் கண்டறிந்து முஸ்லிம்களுக்கு எதிராக மட்டும் இவ்வாறு செயற்படுவதை ஆராய காணி அமைச்சால் விசேட விசாரணைக் குழுவொன்றை நியமிக்க முடியுமா என்றும் அவர் கேட்டார்.

இதற்குப் பதிலளித்த பிரதி அமைச்சர் அரவிந்த செனரத் விதாரண, மண்முனைப்பற்று பிரதேச செயலகப் பிரிவில் அரச காணிகளில் வாழ்ந்து வரும் முஸ்லிம்களுக்கு அநீதி ஏற்படுகின்றதா என்பது தொடர்பில் காணி ஆணையாளர் நாயகம் ஊடாக விசாரணை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்போம்.

காணியற்ற மக்கள் தங்களுக்குக் காணியொன்றைப் பெற்றுக்கொள்ள விண்ணப்பித்தவர்களில் தெரிவு செய்யப்பட்ட குறிப்பிட்ட சிலருக்குக் காணி வழங்கியுள்ளோம், ஆனால் அவர்களுக்கு உறுதி அல்லது அனுமதிப்பத்திரம் வழங்கவில்லை என்பதையும் அவர் ஒப்புக்கொண்டார்.

காணி உறுதி அல்லது அனுமதிப்பத்திரம் வழங்கப்படாமைக்கான காரணங்களாக அவர் பின்வருவனவற்றைக் குறிப்பிட்டார்.காணி கோரி விண்ணப்பித்தவர்களில் சிலர் காணி கச்சேரிக்கு வருகை தராதமை. 8 பேர்ச்சிற்கு குறைந்த காணி விண்ணப்பதாரிகள் நிராகரிக்கப்பட்டது. காணி முரண்பாடுகள் இருக்கும் அரச காணிகளில், அந்த முரண்பாடுகள் தீர்க்கப்படாததால் உறுதி வழங்க முடியாமல் போனமை.

Share
தொடர்புடையது
25 68f95d9f05e86
செய்திகள்அரசியல்இலங்கை

2026 மாகாண சபை தேர்தல்கள் காலவரையின்றி ஒத்திவைப்பு: கட்சிக்குள் ஆழமான கலந்துரையாடல்கள் காரணம்!

அடுத்த ஆண்டு நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த மாகாண சபைத் தேர்தல்களைக் காலவரையின்றிப் பிற்போடுவதற்கு அரசாங்கம் அதிகாரப்பூர்வமற்ற முடிவை...

25 68f9483b692e2
செய்திகள்இலங்கை

போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனை தேவை: சிறைச்சாலை ஆணையர் ஜகத் வீரசிங்கவின் ஆவேச உரை!

போதைப்பொருள் கடத்தல்காரர்கள் தூக்கிலிடப்பட வேண்டும் என்று சிறைச்சாலை ஆணையர் ஜகத் வீரசிங்க வலியுறுத்தியுள்ளார். இவர் நாவலப்பிட்டியில்...

images 1 5
செய்திகள்உலகம்

போர் நிறுத்தம் பின்னணியிலும் நெருக்கடி: கனடா, பிரான்ஸ் உட்பட பல நாடுகளும் நெதன்யாகுவை கைது செய்ய தயார்!

இஸ்ரேல் – காசா போரில் அமெரிக்காவின் தலையீட்டால் தற்போது அமைதி ஒப்பந்தம் (போர் நிறுத்தம்) ஏற்படுத்தப்பட்டுள்ள...

1761139778 Piumi Hansamali Sri Lanka Ada Derana 6
செய்திகள்இலங்கை

“பத்மே எனது அழகுசாதனப் பொருட்களைப் பயன்படுத்தத்தான் சொன்னேன்”: பாதாள உலகத் தொடர்பு குற்றச்சாட்டுக்கு பியூமி ஹன்சமாலி விளக்கம்!

பாதாள உலகக் குழுக்களின் தலைவராகக் கருதப்படும் கெஹல்பத்தர பத்மேவுடனான தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக...