இந்தியாவின் பிரபலத் தொழிலதிபரான மோகன் சுரேஷ் தனது மகன் ஜஹ்ரான் சுரேஷின் திருமணத்தை நடத்த இலங்கையைத் தேர்ந்தெடுத்துள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்த நிகழ்வு நாட்டின் சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறைகளுக்குச் சிறப்பான ஊக்கத்தை அளிப்பதாகக் குறிப்பிடப்படுகிறது.
இந்த ஆடம்பரமான திருமண விழா எதிர்வரும் நவம்பர் 23 ஆம் திகதி நடைபெறவுள்ளது. பென்டோட்டாவில் அமைந்துள்ள சினமன் விருந்தகம் (Cinnamon Hotel) இந்த விழாவை நடத்தத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
சுமார் 300 இந்திய விருந்தினர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவிலிருந்து அதிகமான விருந்தினர்கள் வருகை தருவதனால், இலங்கையின் சுற்றுலாத் துறைக்கு இது ஒரு முக்கியமான நிகழ்வாகக் கருதப்படுகிறது.
இந்தத் திருமணம் மூலம் இலங்கைக்குச் சுமார் ரூ. 35 மில்லியன் (3.5 கோடி) வருவாய் ஈட்டப்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளதாக அந்த ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.