22 17
இந்தியாசெய்திகள்

இந்திய கடற்றொழிலாளர்களின் தொடர் கைது: மத்திய அரசுக்கு ஸ்டாலின் தகவல்

Share

இந்திய கடற்றொழிலாளர்களின் தொடர் கைது: மத்திய அரசுக்கு ஸ்டாலின் தகவல்

இந்திய (India) கடற்றொழிலாளர்கள் 8 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தமை குறித்து மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் (M.K. Stalin) தகவல் அளித்துள்ளார்.

ஏற்கனவே, 116 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு காவலில் உள்ள நிலையில், கடந்த ஒரு வாரத்தில் இடம்பெற்ற இரண்டாவது சம்பவம் இதுவாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், அவர்களை விடுவிக்க இராஜதந்திர முயற்சிகளை விரைவுபடுத்துமாறு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் (Jai Shankar) ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

எல்லையை மீறிய குற்றச்சாட்டில் 11 இந்தியர்களை, கடந்த 23ஆம் திகதி இலங்கை கடற்படை கைது செய்த நிலையில், இது ஒரு வாரத்திற்குள் நடந்த இரண்டாவது சம்பவமாகும்.

தற்போது, 116 கடற்றொழிலாளர்களும் 184 படகுகளும் இலங்கையில் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடப்பது, கைது செய்யப்பட்ட கடற்றொழிலாளர்களின் குடும்பங்களுக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளன என்றும் அவர் கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...