நடுக்கடலில் சிக்கிய எண்மரை காப்பாற்றிய இந்தியப்படை!!

202203130209250123 Tamil News Coast Guard rescues stranded crew of cargo ship in Kerala SECVPF

கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள பேப்பூரில் இருந்து 18 கடல் மைல் தொலைவில் எம்.எஸ்.வி.பிலால் என்ற சரக்கு கப்பல் பழுதடைந்துள்ளதாகவும், அதில் 8 பணியாளர்கள் சிக்கியுள்ளதாகவும் கடலோரக் காவல்படை தகவல் வந்தது.

இதனையடுத்து விக்ரம் என்ற மீட்பு கப்பல் மூலம் அந்த பகுதிக்கு சென்ற கடலோரக் காவல்படையினர் பிலால் கப்பலில் இருந்த 8 பணியாளர்களை பத்திரமாக மீட்டனர்.

லட்சத்தீவுக்குச் செல்லும் வழியில் அந்த கப்பலுக்குள் கடல்நீர் புகுந்ததால் எஞ்ஜின் பழுதடைந்துள்ளது.

இதையடுத்து அந்த கப்பல் இன்டர்செப்டர் படகுடன் இணைக்கப்பட்டு திரும்ப எடுத்துச் செல்லப்பட்டதாக கடலோர காவல்படையின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#IndiaNEws

Exit mobile version