1739447780 5783
இந்தியாசெய்திகள்

இந்திய விமானங்களுக்கான வான்வெளித் தடையை ஜனவரி வரை நீடித்தது பாகிஸ்தான்!

Share

இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியைப் பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பதாக பாகிஸ்தான் அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய விமானங்கள் தனது வான்பரப்பைப் பயன்படுத்த பாகிஸ்தான் தடை விதித்தது. இதற்குப் பதிலடியாக இந்தியாவும் பாகிஸ்தான் விமானங்களுக்குத் தனது வான்வெளியைப் பயன்படுத்தத் தடை விதித்தது.

மாதந்தோறும் இந்தத் தடையை நீடித்து வரும் பாகிஸ்தான், தற்போது டிசம்பர் 24-ஆம் திகதியுடன் நிறைவடைய இருந்த காலக்கெடுவை, எதிர்வரும் ஜனவரி 24, 2026 வரை நீட்டித்துள்ளது.

இந்தத் தடையானது இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட அனைத்துப் பயணிகள் விமானங்கள், இந்திய தனியார் விமான நிறுவனங்களுக்குச் சொந்தமான விமானங்கள் மற்றும் இந்திய இராணுவ விமானங்கள் ஆகியவற்றுக்குப் பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையே வான்வெளிப் போர் நீடித்து வந்தாலும், அண்மையில் இலங்கையில் ஏற்பட்ட ‘டிட்வா’ சூறாவளி அனர்த்தத்தின் போது, வெள்ள நிவாரணப் பொருட்களை ஏற்றிச் சென்ற பாகிஸ்தான் விமானம் இந்திய வான்வெளியைப் பயன்படுத்த இந்திய அரசு மனிதாபிமான அடிப்படையில் அனுமதி வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...