24 8
இந்தியா

உலகின் முதல் டிரில்லியனராக மாறப்போகும் எலோன் மஸ்க்

Share

உலகின் முதல் டிரில்லியனராக மாறப்போகும் எலோன் மஸ்க்

இன்ஃபோமா கனெக்ட் அக்கடமியின்(Informa Connect Academy) அண்மைய பகுப்பாய்வு அறிக்கையின்படி, உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலோன் மஸ்க்(elon musk), 2027 ஆம் ஆண்டில் உலகின் முதல் டிரில்லியனராக இருப்பார் என தெரியவந்துள்ளது.

ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் டெஸ்லாவின் தலைமை நிர்வாக அதிகாரியான எலோன் மஸ்க், 251 பில்லியன் அமெரிக்க டொலர்கள் மதிப்புடையவர் மற்றும் அவரது சொத்துக்கள் ஆண்டுதோறும் 110 சதவீதம் என்ற விகிதத்தில் வளர்ந்து வருவதாக இன்ஃபோர்மா கனெக்ட் அக்கடமி தெரிவித்துள்ளது.

மேலும், அவர் சிஇஓவாக இருக்கும் ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் டெஸ்லா நிறுவனங்களின் மதிப்பு இந்த ஆண்டு 1195 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என இன்ஃபோமா கனெக்ட் அக்கடமி தெரிவித்துள்ளது.

இந்தியாவின் கௌதம் அதானி(gautam adani) 2028 ஆம் ஆண்டில் உலகின் இரண்டாவது டிரில்லியனராக மாறுவார் என்றும், அவரது சொத்து ஆண்டுக்கு 123 சதவீதம் என்ற விகிதத்தில் வளரும் என்றும் இன்ஃபோமா கனெக்ட் அக்கடமி கணித்துள்ளது.

பட்டியலில் மூன்றாவது மற்றும் நான்காவது இடங்களை என்விடியாவின் தலைமை நிர்வாக அதிகாரி ஜென்சன் ஹுவாங்(Jensen Huang) மற்றும் இந்தோனேசிய எரிசக்தி மற்றும் சுரங்கத் துறையில் ஜாம்பவானான பிரஜோகோ பாங்கெஸ்ட்(Prajogo Pangestu) ஆகியோர் உள்ளனர், அவர்கள் 2028 ஆம் ஆண்டில் டிரில்லியனர்களாக மாறுவார்கள் என்று இன்ஃபோமா கனெக்ட் அக்கடமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பட்டியலில் ஆறாவது இடத்தைப் பிடித்திருக்கும் மெட்டா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி மார்க் ஜூக்கர்பெர்க்(Mark Zuckerberg) 2030-ல் டிரில்லியனாகவும், எட்டாவது இடத்தில் இருக்கும் இந்தியாவின் முகேஷ் அம்பானி(Mukesh Ambani) 2033-ஆம் ஆண்டில் டிரில்லியனாகவும் வருவார்கள் என்றும் இன்ஃபோமா கனெக்ட் அக்கடமி கணித்துள்ளது.

இந்தப் பட்டியலில் முதல் 10 டிரில்லியனர்களில் இரண்டு இந்தியர்கள் இருப்பதும், உலகப் பணக்காரர்களின் ஆண்டுப் பொருளாதார வளர்ச்சி விகிதம் மாறாமல் இருக்கும் என்ற அனுமானத்தில் இன்ஃபோமா கனெக்ட் அக்கடமி இந்த ஆய்வு அறிக்கையைத் தயாரித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
13 2
இந்தியாசெய்திகள்

இஸ்ரேலில் இருந்து நாடு திரும்ப எதிர்பார்க்கும் இலங்கையர்களுக்கான அறிவிப்பு!

இஸ்ரேலின் தற்போதைய சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு, இலங்கைக்கு பயணிக்க விரும்புவோருக்கு அறிவிப்பொன்று வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு இஸ்ரேலில் இருந்து...

25 684a2fdb31138 1
இந்தியாசெய்திகள்

இந்தியாவில் அவசரமாக தரை இறங்கிய இங்கிலாந்து விமானம்

இங்கிலாந்தின்(UK) எப்-35 போர் விமானம் திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரை இறங்கியுள்ளதாக இந்திய...

25 684a1d46ac31b
இந்தியாசெய்திகள்

இந்தியா – இலங்கை ஒப்பந்தம் குறித்து வெளியாகியுள்ள சந்தேகம்

இந்தியாவின் இணக்கப்பாடு இன்றி இரு நாடுகளுக்கும் இடையிலான உடன்படிக்கையை அம்பலப்படுத்த முடியாது என அரசாங்கம் அறிவித்துள்ளதாக...

6 3
இந்தியாஇலங்கைசெய்திகள்

தாயின் இரண்டாவது கணவரை அடித்துக் கொன்ற இளைஞன்

கேகாலையில் தனது தாயின் இரண்டாவது கணவரை அடித்துக் கொலை செய்த இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளனர்....