th
செய்திகள்இலங்கை

இந்தியாவுக்குச் சட்டவிரோதமாகப் படகில் சென்ற இலங்கையர் கைது

Share

சட்டவிரோதமான முறையில் மன்னாரில் இருந்து படகு மூலம் இந்தியாவின் தனுஷ்கோடி அரிச்சல்முனை பகுதியைச் சென்றடைந்த குடும்பஸ்தர் ஒருவர் இன்று வியாழக்கிழமை (நவம்பர் 13) காலை கைது செய்யப்பட்டுள்ளார்.

தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரை பகுதியில் இன்று காலை மரைன் காவல்துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, கடற்கரையில் சந்தேகத்துக்கு இடமான முறையில் நின்றுகொண்டிருந்த நபரைப் பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில் அவர், சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக இலங்கையிலிருந்து தனுஷ்கோடி சென்று இறங்கியமை தெரியவந்துள்ளது.

அவர் மன்னார் வங்காலைப் பகுதியைச் சேர்ந்த 56 வயதுடைய நபர் என்பது தெரியவந்தது.

இதையடுத்து, கைது செய்யப்பட்ட அந்த நபரைக் கொண்டு, சட்டவிரோதமான முறையில் கடல் வழியாகத் தமிழகத்துக்குள் சென்றதற்கான காரணம் குறித்து மரைன் காவல்துறையினர் மண்டபம் மரைன் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share
தொடர்புடையது
images 5 6
செய்திகள்இலங்கை

வங்காள விரிகுடாவில் புதிய குறைந்த அழுத்தப் பகுதி:  தாழமுக்கம் உருவாக வாய்ப்பு 

தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் எதிர்வரும் நவம்பர் 22ஆம் திகதியளவில் ஒரு புதிய குறைந்த அழுத்தப் பிரதேசம்...

national hospital
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கண்டி தேசிய வைத்தியசாலையில் சாதனை: குறுகிய காலத்தில் நடமாட வைக்கும் முழங்கால் மாற்றுச் சத்திரசிகிச்சை – தாய்லாந்து நிபுணர்கள் உதவி!

இலங்கைக்கும் தாய்லாந்துக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் ஆரம்பிக்கப்பட்டு 70 ஆண்டுகள் பூர்த்தியாவதைக் குறிக்கும் வகையில், கண்டி...

images 4 7
உலகம்இலங்கை

பிரித்தானியாவை விட்டு வெளியேறியவர்களின் எண்ணிக்கை முந்தைய தரவுகளை விட மூன்று மடங்கு அதிகரிப்பு!

பிரித்தானியாவை விட்டு நிரந்தரமாக வெளியேறிய பிரித்தானியர்களின் எண்ணிக்கை முன்னதாக அறிவிக்கப்பட்ட தரவுகளைக் காட்டிலும் மிகவும் அதிகம்...

5dbc2f30 18e7 11ee 8228 794cf17b91f4.jpg
செய்திகள்உலகம்

தமிழகத்தில் அதிர்ச்சி: தாயைத் தாக்கி இரண்டரை வயதுக் குழந்தையைக் கடத்திய வழக்கில் 5 பேர் கைது!

இரண்டரை வயதுக் குழந்தையைக் கடத்திய குற்றச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத்...