கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அரசியல் பயணம் முடிவடைந்து விடும் என சிலர் எண்ணிக்கொண்டிருந்தனர்.
இந்த நிலையில் சிறிசேனவின் சிந்தனைகள் வேறு விதமாக இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அண்மையில் நெருக்கமானவர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடலில், மைத்திரிபால சிறிசேன தனது எதிர்கால அரசியல் அபிலாஷைகளை வெளிப்படுத்தியுள்ளார்.
தான் மீண்டும் அரச தலைவராகப் பதவிக்கு வர எதிர்பார்த்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக பதவிக்கு வர முடியாவிட்டால், முழுமையான அதிகாரங்களுடன் கூடிய பிரதமர் பதவிக்காவது வர வேண்டும் என்பது அவரது எதிர்பார்ப்பு எனவும் கூறப்படுகிறது.
பல ஊழல் குற்றச்சாட்டுக்களை எதிர்நோக்கியுள்ள ராஜபக்ஸவினருக்கு, மீண்டும் அரச அதிகாரத்திற்கு வர முடியுமாயின், எந்தக் குற்றச்சாட்டையும் எதிர்நோக்காத தன்னால், ஏன் அரச தலைவராகப் பதவிக்கு வர முடியாது எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்
இந்த நிலையில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கீழ் புதிதாக அரசியல் கூட்டணி ஒன்றை உருவாக்கும் நோக்கில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை மீண்டும் இயங்க செய்யும் முயற்சியில் சுதந்திரக் கட்சி தற்போது ஈடுபட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை மீண்டும் ஆட்சி அதிகாரத்திற்கு கொண்டு வருவதே இதன் நோக்கம் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
#SrilankaNews