5ec14a30 616d 11ef b970 9f202720b57a.png
செய்திகள்அரசியல்இலங்கை

இனி தீவிர அரசியலில் நான் இல்லை: மகாநாயக்க தேரர்களைச் சந்தித்த பின் ரணில் விக்கிரமசிங்க அதிரடி அறிவிப்பு!

Share

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (23) காலை கண்டிக்கு விஜயம் செய்து, மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்களின் மகாநாயக்க தேரர்களைச் சந்தித்து ஆசிகளைப் பெற்றார்.

முன்னாள் ஜனாதிபதி முதலில் மல்வத்து பீடத்தின் மகாநாயக்கர் அதி வணக்கத்திற்குரிய திப்போட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரரைச் சந்தித்தார். அதனைத் தொடர்ந்து, அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்கர் அதி வணக்கத்திற்குரிய வரகாகொட ஸ்ரீ ஞானரத்ன தேரரைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.

இந்தச் சந்திப்புகளின் போது, நாட்டின் தற்போதைய அரசியல் சூழல் மற்றும் முக்கிய தேசிய விடயங்கள் குறித்து மகாநாயக்க தேரர்களுடன் அவர் நீண்ட நேரம் கலந்துரையாடியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மகாநாயக்கர்களுடனான சந்திப்பை முடித்துக்கொண்டு வெளியே வந்த ரணில் விக்கிரமசிங்கவிடம், நாட்டின் தற்போதைய அரசியல் மாற்றங்கள் குறித்து ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் மிகச் சுருக்கமாக இனி தீவிர அரசியலில் நான் ஈடுபடவில்லை பதிலளித்தார்:

கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர் தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்த ரணில் விக்கிரமசிங்க, இன்றைய இந்த அறிவிப்பின் மூலம் தனது அரசியல் ஓய்வை மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தியுள்ளார்.

 

 

Share
தொடர்புடையது
Untitled 77
செய்திகள்இலங்கைபிராந்தியம்

செவனகலையில் 1,000 லீற்றர் மண்ணெண்ணெய் பறிமுதல்: இருவர் கைது!

மொனராகலை மாவட்டம், செவனகல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தண்டுவ பகுதியில், எவ்வித அனுமதிப்பத்திரமுமின்றி சட்டவிரோதமான முறையில் லொறி...

Untitled 76
செய்திகள்உலகம்

ஈரானில் அமெரிக்க போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது: பரபரப்பான பின்னணி!

ஈரானின் வான்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த அமெரிக்காவின் அதிநவீன போர் விமானத்தை, தங்கள் நாட்டின் புதிய வான்...

Untitled 75
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அநுராதபுரத்தில் அதிரடிச் சோதனை: காலாவதியான அரிசி பறிமுதல்!

எதிர்வரும் சித்திரை புத்தாண்டுப் பண்டிகை காலத்தை முன்னிட்டு, நுகர்வோருக்குப் பாதுகாப்பான உணவுப் பொருட்கள் கிடைப்பதை உறுதி...

Untitled 74
செய்திகள்இலங்கைபிராந்தியம்

களுத்துறை பொலிஸ் கல்லூரி பட்டமளிப்பு விழா: 280 அதிகாரிகள் நியமனம்!

களுத்துறை பொலிஸ் கல்லூரியில் தங்களது அடிப்படைப் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த 280 பயிலுநர் பொலிஸ்...