suresh
செய்திகள்அரசியல்இலங்கை

அரசியல் தீர்வு வாக்குறுதியை எப்படி நம்புவது? – அரசாங்கத்திற்கு சுரேஷ் பிரேமச்சந்திரன் கேள்வி!

Share

தமிழ் மக்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வு வழங்கப்படும் என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் அண்மையில் வெளியிட்ட கருத்தை நம்ப முடியாது என ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் ஊடகப் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்று ஊடகவியலாளர்களைச் சந்தித்த போதே அவர் இந்த அதிருப்தியை வெளியிட்டார்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்து ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையிலும், காணி விடுவிப்பு, பயங்கரவாதத் தடைச் சட்ட நீக்கம் போன்ற உடனடித் தீர்வுகளைக் கூட இன்னும் வழங்கவில்லை.

முப்படைகளின் தளபதியாக இருக்கும் ஜனாதிபதி நினைத்தால் வடக்கில் காணிகளை விரைவாக விடுவிக்க முடியும். ஆனால், நடைமுறையில் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிற்குக் கூட காணி விடுவிப்பு இடம்பெறவில்லை என அவர் குற்றம் சாட்டினார்.

13-ஆவது திருத்தச் சட்டம் நீக்கப்படும் என அரசு கூறுகிறது. அப்படியாயின் அதற்குப் பதிலாக வரப்போவது சமஷ்டியா (Federalism) அல்லது வேறெந்த அதிகாரப் பகிர்வு முறைமை? இது குறித்து ஜனாதிபதியோ அல்லது ரில்வின் சில்வாவோ இதுவரை வாய் திறக்கவில்லை” என அவர் சுட்டிக்காட்டினார்.

கடந்த கால அரசுகளைப் போலவே இந்த அரசும் வெறும் சொல்லளவில் மட்டும் உறுதிமொழிகளை வழங்கித் தமிழ் மக்களை ஏமாற்றி வருவதாக அவர் சாடினார். உண்மையான மாற்றம் ஏற்பட வேண்டுமாயின், அரசு தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்திச் செயலில் காட்ட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

 

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...