நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறிய திலினி பிரியமாலிக்கு பிடியாணை: ஹோமாகம நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

image 55b1ad95b8

கோடிக்கணக்கான ரூபாய் நிதி மோசடி குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ள பிரபல பெண் தொழிலதிபர் திலினி பிரியமாலிக்கு எதிராக ஹோமாகம நீதிவான் நீதிமன்றம் இன்று (12) பிடியாணை (Warrant) பிறப்பித்துள்ளது.

திலினி பிரியமாலிக்கு எதிராக ஹோமாகம நீதிவான் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணை இன்று திங்கட்கிழமை எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது அவர் நீதிமன்றத்தில் முன்னிலையாகத் தவறியுள்ளார்.

இதனைத் தீவிரமாகக் கருத்திற்கொண்ட ஹோமாகம நீதிவான், சந்தேக நபரை உடனடியாகக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துமாறு பிடியாணை பிறப்பித்தார்.

குறித்த வழக்கின் மேலதிக விசாரணைகளை எதிர்வரும் ஜூன் மாதம் 15-ஆம் திகதிக்கு நீதிவான் ஒத்திவைத்துள்ளார்.

திலினி பிரியமாலி, இலங்கையின் அரசியல்வாதிகள், மதத் தலைவர்கள் மற்றும் தொழிலதிபர்களிடம் பல கோடி ரூபாய் பணத்தை ஏமாற்றியதாகக் குற்றம்சாட்டப்பட்டு ஏற்கனவே சிறை தண்டனை அனுபவித்து பிணையில் வெளிவந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் மீதான ஏனைய நிதி மோசடி வழக்குகள் கொழும்பு மற்றும் ஏனைய நீதிமன்றங்களில் தொடர்ச்சியாக விசாரணை செய்யப்பட்டு வருகின்றன.

 

 

Exit mobile version