17
இந்தியாசெய்திகள்

கரூர் சம்பவம்: ஹேம மாலினி தலைமையில் ப.ஜ.க விசாரணைக்குழு அமைப்பு

Share

கரூர் சம்பவம் தொடர்பில் ஆய்வு மேற்கொள்ள பாரதிய ஜனதா கட்சி, ஹேம மாலினி தலைமையில் விசாரணைக் குழுவை அமைத்துள்ளது.

கடந்த சனிக்கிழமை (செப்டம்பர் 27) கரூரில் தமிழக வெற்றிக் கழக தலைவர், நடிகர் விஜய் தலைமையிலான பரப்புரை கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்துள்ளனர், 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

இதில் பலர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

இச்சம்பவம் நாடு முழுவதும் அரசியல் வட்டாரத்திலும் பொதுமக்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், பாரதிய ஜனதா கட்சி (BJP) தலைவர் ஜே.பி. நட்டா, சம்பவத்தை ஆய்வு செய்ய 8 உறுப்பினர்கள் கொண்ட விசாரணைக்குழுவை அமைத்துள்ளார்.

இந்த குழுவின் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் நடிகையுமான ஹேமா மாலினி நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும், முன்னாள் மத்திய அமைச்சரும், மக்களவை எம்.பி.யுமான அனுராக் தாக்கூர், பாஜக எம்.பி.க்கள் தேஜஸ்வி சூர்யா, பிரிஜ் லால், சிவசேனா தலைவர் ஸ்ரீகாந்த் ஷிண்டே, பாஜக எம்.பி.க்கள் அபராஜிதா சாரங்கி, ரேகா சர்மா, தெலுங்கு தேசம் கட்சி தலைவர் புட்டா மகேஷ்குமார் ஆகியோர் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

Share
தொடர்புடையது
30
இலங்கைசெய்திகள்

எரிபொருள் விலையில் இன்று ஏற்படவுள்ள மாற்றம்

நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள எரிபொருளின் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. மாதாந்த எரிபொருள்...

29
இலங்கைசெய்திகள்

மகிந்தவை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ரணில்

ரணிலும் நானும் பரஸ்பர மரியாதையை பேணக்கூடிய அரசியல் கலாசாரத்தை கொண்டவர்கள் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த...

28
இலங்கைசெய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான தகவல்கள் வெளிவருவதைத் தடுக்க அரசாங்கம் சதி! முஜிபுர் ரஹ்மான்

பாதுகாப்பு பிரதியமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை நிராகரித்ததன் மூலம் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான தகவல்கள்...

27
இந்தியாசெய்திகள்

போனில் பேசிய ராகுல் காந்தி – வீட்டை விட்டு வெளியேறிய விஜய் எங்கே சென்றார்?

36 மணி நேரங்களுக்கு பின்னர் தவெக தலைவர் விஜய் தனது வீட்டை வெளியேறியுள்ளார். கரூரில் தவெக...