25 693fd3d85a76b
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஊவா மாகாணத்தில் உள்ள 892 பாடசாலைகளும் இன்று நண்பகலுடன் மூடல் – சீரற்ற வானிலையால் அதிரடி முடிவு!

Share

ஊவா மாகாணத்தில் தற்போது நிலவி வரும் கடும் மழை மற்றும் சீரற்ற வானிலை காரணமாக, மாகாணத்திலுள்ள அனைத்துப் பாடசாலைகளையும் இன்று (09) நண்பகலுடன் மூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஊவா மாகாண தலைமைச் செயலாளர் இது குறித்து விடுத்துள்ள அறிவிப்பில் இன்று முற்பகல் 11.45 மணியுடன் அனைத்துப் பாடசாலைகளும் மூடப்பட வேண்டும். மாகாணத்திலுள்ள மொத்தம் 892 பாடசாலைகளுக்கும் இந்த உத்தரவு பொருந்தும்.

மாகாணத்தின் பல பகுதிகளில் பெய்து வரும் அடைமழை காரணமாக மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்துச் சிரமங்களைக் கருத்திற்கொண்டே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

மழையுடனான வானிலை தொடர்வதால், மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகள் மற்றும் நீர்நிலைகளுக்கு அருகே வசிக்கும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். நிலைமை சீரானதும் பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படுவது குறித்து அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...